வெள்ளி, 24 மே, 2013

பாக்.,குக்கு உதவ தயார் ; சீன பிரதமர் அறிவிப்பு


இஸ்லாமாபாத்: ""பாகிஸ்தானுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும், சீனா தாராளமாக வழங்கும். பாகிஸ்தானுக்கு சீனா உதவுவது, தனக்குத் தானே உதவுவது போன்ற எண்ணத்தை, எங்களுக்கு ஏற்படுத்துகிறது,'' என, சீன பிரதமர், லீ கெகியாங் கூறியுள்ளார். இரண்டு நாட்களுக்கு முன், இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட, சீன பிரதமர், லீ கெகியாங், "இந்தியாவும், சீனாவும், பங்குதாரர் நாடுகள்; பாரம்பரிய உறவு கொண்ட நாடுகள்; இந்தியாவுக்கு எதிரான, எந்தச் செயலிலும், எப்போதும் சீனா ஈடுபடாது; இரு நாடுகளும் ஒன்றிணைந்தால், உலக நாடுகள் அதிரும்' என, பேசினார். இந்திய பயணத்தை முடித்துக் கொண்டு, நேற்று முன்தினம், பாகிஸ்தான் சென்ற கெகியாங், நேற்று அந்நாட்டிலிருந்து, சீனா புறப்பட்டுச் சென்றார். முன்னதாக அவர், பாக்., பார்லிமென்டில் பேசியதாவது: பாகிஸ்தானுக்கும், சீனாவுக்கும் இடையே, வர்த்தகம், எரிசக்தி, உட்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். பாகிஸ்தானுக்குத் தேவையான, அனைத்து உதவிகளையும், தாராளமாக வழங்க, சீனா தயாராக உள்ளது. பாகிஸ்தானுக்கு சீனா உதவுவது, தனக்குத் தானே உதவுவது போன்ற எண்ணத்தை, எங்களுக்கு ஏற்படுத்துகிறது. இவ்வாறு, சீன பிரதமர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக