சனி, 29 செப்டம்பர், 2012

மக்கள் நீதிமன்றத்தில் கதறி அழுத அப்துல் நாஸர் மஃதனியின் மகன்!


புதுடெல்லி: “எனது வாப்பாவை(தந்தை) காணும் பொழுதெல்லாம் நான் உணர்ச்சியை கட்டுப்படுத்திக் கொள்வேன். ஆனால், கடைசியாக நான் அவரை சந்தித்தபொழுது என்னால் அடக்க முடியவில்லை.” என்று அப்துல் நாஸர் மஃதனியின் மகன் உமர் முக்தார் மக்கள் நீதிமன்றத்தில் கதறி அழுத காட்சி அனைவரையும் நெகிழ்ச்சி அடையவைத்தது. ஜோடிக்கப்பட்ட வழக்குகளுக்கு எதிரான விசாரணையை நடத்திய மக்கள் நீதிமன்றத்தில் கலந்துகொண்டு தனது தந்தைக்கு ஏற்பட்ட துயரங்களை எடுத்துரைத்தார் உமர் முக்தார்..
“இரண்டு வாரங்களுக்கு முன்பு நான் சிறைக்குச் சென்றபொழுது கண்களின் பார்வை இழந்துவிட்டதாக கூறிய வாப்பா, ஒரு கண்ணை மூடிக்கொண்டு பேசினார். எனது பிள்ளைகளை இனி காண முடியுமா? என கவலை தெரிவித்த அவரது கண்கள் கண்ணீரால் நிறைந்திருந்தன. என்னால் எனது உணர்வுகளை கட்டுப்படுத்த முடியவில்லை. சிறுவயது முதலே நான் போர்டிங் ஸ்கூலில் தங்கி பயின்று வருகிறேன். அரவணைப்பிற்கு பதிலாக என்னைச் சுற்றிலும் நிறைந்திருந்தது தீவிரவாத முத்திரையாகும். தன்னைப் போன்ற ஏராளமான நிரபராதிகள் நாட்டின் பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களின் விடுதலைக்காக பாடுபாட நான் வழக்கறிஞர் ஆகவேண்டும் என்பதே எனது வாப்பாவின் விருப்பமாகும்.” என்று உமர் முக்தார் கூறினார்

வங்கி மோசடி வழக்கின் பினைக்கால விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக Nakoula Basseley Nakoula கைது


நபிகள் நாயகத்தை கொச்சைபடுத்தி திரைப்படம் தயாரித்த Nakoula Basseley Nakoula என்பவன் அமெரிக்க போலிசாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளான். இவன் நபிகள் நாயகத்தை கொச்சைபடுத்தி படத்தை தயார் செய்த குற்றத்திற்காக கைது செய்யப்படவில்லை.
கடந்த 2010 ஆம் ஆண்டு வங்கி மோசடியில் இவன் கைதாகி பினையில் வெளிவந்தான். கோர்ட் இவனை அதிகாரிகளின் அனுமதி இல்லாமல் இன்டர்நெட்டை பயன்படுத்தக் கூடாது புனைப் பெயர் வைக்கக் கூடாது என்ற நிபந்தனையின் அடிப்படையில் பினையில் விட்டது. தற்போது இந்த படத்தை தயாரித்து அதை Youtube ல் புனைப் பெயரில் அப்லோடு செய்து கோர்ட் விதித்த நிபந்தனைகளை மீறி உள்ள குற்றத்திற்காக ஃபெடரல் கோர்ட் நீதிபதிமன்றம் பினையில்லாத கைது உத்தரவை நேற்று பிறப்பித்துள்ளது. மேலும் அதிகாரிகளிடம் நான் இந்த படத்தை தயாரிக்க வில்லை Youtube ல் அப்லோடு செய்யவில்லை என பொய் கூறிய காரணத்திற்காகவும் அவன் கைது செய்யப்பட்டுள்ளான்.

வெள்ளி, 28 செப்டம்பர், 2012

நேரடி விவாதம்


மவ்லவி பி.ஜே. அவர்களுடன் தூத்துக்குடி ஜமாத்துல் உலமா சபை நேரடி விவாதம் இன்று நடை பெறுகிறது. தலைப்பு : திருக்குரானில் எழுத்து பிழைகளா ? இந்த நிகழ்ச்சி www.onlinepj.com இணைய தளத்தில் LIVE
நேரடி ஒலிபரப்பு செய்யபடுகிறது.

முஸ்லிம் என்பதால் பதவி உயர்வை தடுக்கிறார்கள் – சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்!


மும்பை:முஸ்லிம் என்ற காரணத்தால் தான் நீதிபதியாக பதவி உயர்வு பெறும் வாய்ப்பு தடுக்கப்பட்டதாக சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் குற்றம் சாட்டியுள்ளார். த ஹிந்து நாளிதழுக்கு அளித்த பேட்டியில் அஜ்மல்கான் கூறியது: “நீண்டகால அனுபவத்தின் அடிப்படையில் கடந்த 2011 ஆம் ஆண்டு நீதிபதி பதவிக்கு நான் தகுதியானவர் என்பதை நீதிமன்றம் கண்டறிந்தது. அதற்கு அனுமதி ஆவணமும் எனக்கு வழங்கப்பட்டது. ஆனால், பின்னர் பதவி உயர்வு தடைப்பட்டுப் போனது. மத அடிப்படைவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதாக உளவுத்துறையின் குற்றச்சாட்டு எனது பதவி உயர்வுக்கு பின்னடைவை ஏற்படுத்தியது.
நண்பர்கள், என்னுடன் பணிபுரிபவர்கள் ஆகியோரிடம் என்னைக் குறித்து விசாரித்துள்ளனர். தேசத்துடன் எனக்கு எவ்வளவு தூரம் பற்று இருக்கிறது என்பதை ஆராயவே இந்த விசாரணை. இதனால் நானும், எனது குடும்பத்தினரும் மிகுந்த மன வேதனைக்கு ஆளானோம். ரமலான் மாதத்தில் ஊரில் உள்ள மதரஸா மற்றும் மஸ்ஜிதுக்கு நன்கொடை அளித்ததை குறித்தும் ஐ.பி அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். 1983-89 காலக்கட்டத்தில் மதுரை அரசு சட்டக்கல்லூரியில் ஐந்து ஆண்டுகள் படிப்பில் சேர்ந்த 140 நபர்களில் நானும் ஒருவன். பின்னர் தேர்வில் வெற்றிப் பெற்று முதல்10 இடங்களை பிடித்தவர்களில் நானும் இடம் பெற்றேன். ஆனால், 20 ஆண்டுகளுக்கும் மேலான எனது வழக்கறிஞர் பணியில் சமூக பாரபட்சத்தின் வேலிகளை தாண்டுவதில் நான் தோல்வியை தழுவினேன். ஒரு பொது விசாரணை நடத்தப்பட்டால், எனது பெயர் கான் என்றும், நான் தீவிரவாதி அல்ல என்றும் இந்த தேசத்திற்கு என்னால் உணர்த்த முடியும்.” என்று அஜ்மல் கான் கூறுகிறார். நிரபராதிகளான முஸ்லிம்கள் மீது தீவிரவாத முத்திரையை குத்தாதீர்கள் என்றும், மதத்தை பார்த்து யாரையும் சிறையில் அடைக்க கூடாது என்றும் உச்சநீதிமன்றம் நேற்று முன் தினம் உத்தரவிட்டது. பாலிவுட் நடிகர் ஷாரூக் கானின் ‘மைநேம் ஈஸ் கான்! ஐ அம் நாட் எ டெரரிஸ்ட்’ என்ற திரைப்படத்தின் உரையாடலை மேற்கோள்காட்டி உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியிருந்தது.

புதன், 26 செப்டம்பர், 2012

அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை பொய்வழக்கில் சிக்கவைக்கும் முயற்சி : த.மு.மு.க. கண்டனம்


இன்று தமுமுகவின் தலைமை நிர்வாகக்குழு கூட்டம் தலைமையகத்தில் நடைபெற்றது. அதில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. தற்போது தமிழகத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் அதிராம்பட்டினம் தமீம் அன்சாரி வழக்கு குறித்தும் விவாதிக்கப்பட்டது. தமீம் அன்சாரி, ஒரு புகைப்படக் கலைஞர் என்பதும், குறும்படம் இயக்கும் எண்ணத்துடன் சில முயற்சிகள் செய்துள்ளார் என்பதும், இலங்கைக்கு காய்கறி வியாபாரம் செய்துள்ளார் என்பதும் மட்டுமே உண்மை என்பதும், போலீசார் கூறுவதுபோல் அவர் தீவிரவாதியோ, அன்னிய கைக்குகூலியோ இல்லை என்பதும் தெரிய வந்துள்ளது. காஷ்மீர், குஜராத், டெல்-, பீஹார், மஹாராஷ்ட்ரா, ஆந்திரா, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களைப் போல இங்கும் அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை பொய்வழக்கில்
யை "க்யூ பிராஞ்ச்' போலீசார் தொடங்கி வைத்திருப்பதாக நிர்வாகக்குழு கருதியதால், இதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் கண்டனப் போஸ்டர் ஒட்டுவது என்றும், விரைவில் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தி க்யூ பிராஞ்ச் போலீசின் சதியை அம்பலப்படுத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லும் முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. Thanks - Al ameen

மதத்தை பார்த்து கொடுமை, சட்டத்தை துஷ்பிரயோகம் செய்யாதீர் : உச்சநீதிமன்றம்


புதுடெல்லி:ஒரு நபரின் மதத்தை பார்த்து அவருக்கு கொடுமை இழைக்க சட்டத்தை துஷ்பிரயோகம் செய்யாதீர் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. தீவிரவாதிகள் என்று குற்றம் சாட்டி குஜராத் மாநில தடா நீதிமன்றம் தண்டித்த 11 அப்பாவி முஸ்லிம்களை 10 ஆண்டுகளுக்கு பிறகு விடுதலைச்செய்த வழக்கில் நீதிபதிகளான ஹெச்.எல்.தத்து, சி.கே.பிரசாத் ஆகியோர் அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு தீர்ப்பில் கூறியது. 1994-ஆம் ஆண்டு ஜூன் மாதம் குஜராத் மாநிலம் அஹ்மதாபாத்தில் ஹிந்துக்கள் நடத்திய ஜகன்னாத பூரி யாத்திரையின் போது கலவரத்தை நடத்த சதித்திட்ட தீட்டினார்கள் என்று குற்றம் சாட்டப்பட்ட வழக்கில் தண்டிக்கப்பட்ட 11 முஸ்லிம்கள் சமர்ப்பித்த மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. தாக்குதல் நடத்த திட்டமிட்டார்கள் என குற்றம் சாட்டி அஷ்ரஃப் கான், பாபு முன்னி கான் ஆகியோரை கைது செய்த போலீஸ், தீவிரவாத குற்றம் சுமத்தி மேலும் பலரை கைது செய்தது. 2002 ஜனவரி 31-ஆம் தேதி அஹ்மதாபாத் நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கியது. இதனை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்ற அமர்வு விசாரித்தது. விசாரணையின் இறுதியில் அளித்த தீர்ப்பில் நீதிபதிகள் கூறியது: சட்டத்தை அமல்படுத்த நியமிக்கப்பட்ட போலீஸ் சூப்பிரண்டும், ஐ.ஜி உள்ளிட்ட இதர அதிகாரிகளும் அதனை துஷ்பிரயோகம் செய்யக்கூடாது. பிறந்த மதத்தின் பெயரால் கொடுமை இழைக்கப்படுகிறோம் என்று ஒரு அப்பாவிக்கும் தோன்றக் கூடாது. இதனை சட்டத்தின் பாதுகாவலர்கள் உறுதிச்செய்ய வேண்டும். இதனை கூறுகையில் நீதிபதிகள் ஷாரூக்கான் நடித்த ’மை நேம் ஈஸ் கான்’ என்ற திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘my name is Khan, but I am not a terrorist’ என்ற வசனத்தை சுட்டிக்காட்டினர். இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முஸ்லிம்களுக்கு தண்டனையை அதிகப்படுத்த கோரும் குஜராத் மாநில அரசின் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடிச் செய்தது. எஃப்.ஐ.ஆர் சமர்ப்பிக்கும் முன்பு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டின் அனுமதியை பெறவேண்டும் என்ற தடாச்சட்டத்தில் கூறப்பட்டுள்ள சட்டப் பிரிவை அரசு கடைப்பிடிக்கவில்லை என்று நீதிமன்றம் தெரிவித்தது. தடா சட்டத்தை சுமத்தும் பொழுது கடைப்பிடிக்க வேண்டிய நடவடிக்கைகளை பேணாததால் பலர் விடுவிக்கப்பட்டுள்ளனர். நாட்டின் எதிரிகளும் இதனால் பலன் அடைந்தனர். இதன் மூலம் இச்சட்டம் துஷ்பிரயோகம் செய்யப்படுவதாக கூறப்பட்டது. சட்டத்தை பிரயோகிக்கும் பொழுது தனி நபரின் சுதந்திரத்திற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்பதை உறுதிச் செய்யவேண்டும். தீவிரவாதத்தை தடுப்பதிலும், அதிகமான மக்கள் பலியாகக்கூடாது என்பதில் போலீசாரின் உறுதி பாராட்டத்தக்கது. ஆனால், இவ்வழக்கில் ஆயுதங்களும், வெடிப்பொருட்களையும் கண்டுபிடிக்க புலனாய்வு ஏஜன்சிகளால் இயலவில்லை. இவ்வாறு உச்சநீதிமன்றம் தீர்ப்பில் கூறியது. 5 0 0 5

நபியை கேவலப்படுத்தும் புகைப்படம் வெளியிட்ட இலங்கை பத்திரிக்கை தினக்குரலுக்கு SLTJ யின் கண்டனம்


“தமிழ் பேசும் மக்களின் தனித்துவப் பத்திரிக்கை” என்ற பெயரில் வெளியாகும் தினக்குரல் என்ற அயோக்கியப் பத்திரிக்கை அமெரிக்க மனித வெறி நாய்கள் இஸ்லாத்தையும், நபியவர்களையும் கேவலப்படுத்திய அதே பாணியில் தனது அயோக்கியத் தனத்தையும் நேற்று வெளியிட்டுள்ளது. “முஸ்லீம்களின் அப்பாவித்தனம்” என்ற பெயரில் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட திரைப்படத்தை எதிர்த்து உலகம் முழுவதும் ஆர்பாட்டங்களும், பேரணிகளும் நடந்து வருவதும், பல நாடுகளில் அமெரிக்க தூதுவராலயங்கள் அடித்து நொறுக்கப்பட்டதும், பல நாடுகளில் அமெரிக்க தூதுவராலயங்கள் தற்போது மூடப்பட்டுள்ளதும். அனைவரும் அறிந்த பரபரப்பான செய்தியாகும். அமெரிக்காவின் குறிப்பிட்ட திரைப்படத்திற்கு எதிராகவும், அதன் முன்னோட்டக் காட்சிகளை வெளியிட்டுள்ள யூடூம் இணையதளத்தை கண்டித்தும் இலங்கையிலும் கடந்த 19.09.2012 புதன்கிழமை அன்று ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் சார்பாக மாபெரும் முற்றுகை போராட்டம் நடத்தப்பட்டு அமெரிக்காவின் தூதரகம் சென்று எச்சரிக்கை விடுக்கப்பட்டதும் குறிப்பிடத் தக்கது. நிலைமை இவ்வாரிருக்க “தினக்குரல்” என்ற விஷமப் பத்திரிக்கை முஸ்லீம்களின் உணர்வுகளை தூண்டும் விதமாக தனது பத்திரிக்கை வியாபாரத்தை அதிகரிதுக் கொள்ளும் சந்தர்ப்பவாத நரித் தனத்தினால் குறிப்பிட்ட திரைப்படம் தொடர்பான செய்தியைப் பிரசுரிக்கும் போது அதன் புகைப்படத்தையும் சேர்த்து பிரசுரித்துள்ளது. சனிக்கிழமை வெளியான தினக்குரல் (22.09.2012) பத்திரிகையில் புதிய பண்பாடு எனும் அரசியல் பகுதியில் கலாநிதி எம்.எஸ்.எம். அனஸ் என்பவர் எழுதியுள்ள கட்டுரையில் இந்தப் படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. கடந்த ஒரு வருடத்திற்கு முன்பும் கூட இதே விஷமப் பத்திரிக்கை தனது ஆங்கில இலவச வெளியீடான “ஜூனியர் ஸ்டார்” இதழில் முஹம்மது நபி (ஸல்) அவர்களை கேவலப்படுத்தும் விதத்தில் கார்ட்டூன் படத்தை பிரசுரித்து சர்ச்சையைக் கிளப்பியிருந்தது. அப்போது இது தொடர்பில் அயோக்கியப் பத்திரிக்கையின் ஆசிரியர்பீடம் மன்னிப்பும் கேட்டிருந்தது. அதே பாணியில் தற்போதும் தினக்குரல் தனது கீழ்த்தரமான புத்தியை வெளியிட்டுள்ளது. மற்ற பத்திரிக்கைகளைவிட “தினக்குரல்” பத்திரிக்கையின் ஆசிரியர் பீடத்தில் இரண்டு முஸ்லீம்கள் கடமையாற்றுகின்றார்கள். குறிப்பிட்ட கட்டுரையை முஸ்லீம் ஒருவர் தான் எழுதியும் உள்ளார் நிலைமைய இவ்வாரிருக்க ஏன் குறிப்பிட்ட புகைப்படத்தை தினக்குரல் வெளியிட வேண்டும்? இலங்கை முஸ்லீம்களை தூண்டுவதின் மூலம் தனது வியாபாரத்தை பெருக்க வேண்டும் என்ற அற்ப, அயோக்கிய சிந்தனையை தவிர வேறு எந்த நோக்கவும் பத்திரிக்கை நிர்வாகத்திற்கு கிடையாது என்பது இதன் மூலம் தெளிவாகின்றது. வன்மையாக கண்டிக்கின்றது ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத். இஸ்லாத்தையும், முஸ்லீம்கள் உயிரைவிட மேலாக மதிக்கும் நபியவர்களையும் கேவலப்படுத்தும் விதமாக அமெரிக்கர்கள் செய்த அதே வேலையை செய்யும் “தினக்குரல்” பத்திரிக்கையை ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் வன்மையாக கண்டிக்கின்றது. இந்தப் புகைப்பட விவகாரம் தொடர்பில் தினக்குரல் பத்திரிக்கை நிர்வாகம் தனது பத்திரிக்கையின் முதல் பக்கத்திலேயே பகிரங்க மண்ணிப்பு கோர வேண்டும் என்றும் இல்லாத பட்சத்தில் இது தொடர்பில் ஜனநாயக ரீதியிலான முன்னெடுப்புக்களை ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் மேற்கொள்ளும் என்பதையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

செவ்வாய், 25 செப்டம்பர், 2012

அமெரிக்காவின் ஊடக அரசியலும் அப்பாவி முஸ்லீம்களும்


தற்போது உலகெங்கும் உள்ள இஸ்லாமிய சமூகம் இணையதளத்தில் வெளியான ஒரு திரைப்படத்திற்கு எதிராகக் கொதித்தெழுந்திருக்கிறது. இஸ்லாமியர்கள் போற்றும் முகமது நபிகளை இத்திரைப்படம் இழிவாகச் சித்தரித்திருப்பதற்கு எதிராகத்தான் இப்போராட்டம். அத்திரைப்படத்தின் பெயர் Innocence of Muslims (அப்பாவி முஸ்லீம்கள்). இத்திரைப்படம் பற்றிய விமர்சனத்தை எழுதிவிட்டு, இப்போராட்டத்தில் வெளிப்படும் ஆவேசத்தை சுட்டிக்காட்டுவதுடன் நின்றுவிடுகின்றன சில ஊடகங்கள். இதை வெறும் கிறித்துவம் - இஸ்லாம் என்ற சமயங்கள் சார்ந்த மோதலுக்கான பிரச்சனையாகக் காட்ட முயல்கின்றன சில ஊடகங்கள். இன்னும் சில பார்ப்பனிய ஊடகங்கள் போராட்டத்தின் தன்மையை முன்வைத்து இஸ்லாமியர்களின் ‘சகிப்புத் தன்மை’யைக் கேள்விக்கு உட்படுத்துகின்றன. இத்தகையச் சூழலில் இப்பிரச்சனைக்குப் பின்புலமாக உள்ள அமெரிக்க அரசியலைச் சுட்டிக் காட்டுவதே இக்கட்டுரையின் நோக்கம். தற்போது பரபரப்பிற்கு உள்ளாகியிருக்கும் இத்திரைப்படம் YouTube இணையத்தில் வெளியானது. இது வெறும் 13 நிமிட முன்னோட்டத் (Trailer) திரைப்படம் மட்டுமே. இந்த 13 நிமிடத் திரைப்படம் மூட்டிய நெருப்புதான் இப்போது உலக அளவில் பற்றி எரிந்துகொண்டிருக்கிறது. இதன் மூலத் திரைப்படம் இரண்டு மணிநேரங்களுக்கு உரியது. இந்த முழுத் திரைப்படமும் ஒரே ஒரு நாள் மட்டும் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள ஹாலிவுட்டின் ஒரு வாடகைத் திரையரங்கில் திரையிடப்பட்டிருக்கிறது. ஒரே ஒரு முறை மட்டுமே திரையிடப்பட்ட இப்படத்தைப் பார்த்தவர்கள் பத்துப்பேருக்கும் குறைவானவர்களே! மேலும், அப்போது விளம்பரத்திற்காக இத்திரைப்படத்திற்குத் தரப்பட்ட தலைப்பு என்ன தெரியுமா? Innocent Bin Laden (அப்பாவி பின்லேடன்). அப்படியானால், இதுதான் இத்திரைப்படத்தின் உண்மையான பெயரா என்றால், அதுவும் இல்லை. உண்மையில், இத்திரைப்படத்திற்கு தொடக்கத்தில் சூட்டப்பட்ட பெயர் Desert Warrior (பாலைவனப் போராளி). தற்போது பிரச்சனைக்கு உள்ளாகியிருக்கும் இந்த 13 நிமிட வீடியோ திரைப்படத்திற்கு முன்பாகவே, கடந்த சூலை 1ஆம் நாள் இதற்கான விளம்பரத் துண்டுப்படங்கள் யூடியூப்பில் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கின்றன. அந்த விளம்பரத்தில் இப்படத்திற்கான பெயர் என்ன தெரியுமா? முகமதுவின் உண்மையான வாழ்க்கை (The Real Life of Muhammad). படத்தின் தலைப்பிலேயே இத்தனைக் குளறுபடிகளா, எதுதான் உண்மையான தலைப்பு என்று யோசிக்கிறார்களா? சரிதான். பாலைவனப் போராளி - அப்பாவி பின்லேடன் - அப்பாவி முஸ்லீம்கள் - முகமதுவின் உண்மையான வாழ்க்கை - என்று தலைப்பு மட்டுமே பல அவதாரங்கள் எடுத்திருக்கிறன. தலையைச் சுற்றவைக்கும் தலைப்பு அரசியல் இது! ஆம், ஒரு நயவஞ்சகத்தின் ஆரம்பம் இது. மூலப் படமான ‘பாலைவனப் போராளி’யில் கதை என்ன தெரியுமா? விண்வெளிக் கோள் ஒன்று பூமிக்கு இறங்கி வருகிறது. இதற்கு எதிராக பாலைவனத்து ஆதிவாசி மக்கள் போராடுகிறார்கள். ஆக, அறிவியல் கற்பனையின் அடிப்படையில் அமைந்த ஒரு படம் இது எனலாம். சரி, இதில் முகமது நபிகள் எப்படி வந்தார்? இதுதான் கதை அரசியல்! இந்த மூலப் படத்தில் மதத்தைப் பற்றியோ, குறிப்பாக, இஸ்லாத்திற்கு எதிரான குறிப்போ, முகமது நபிகளுக்கு எதிரான வசனங்களோ எதுவும் இல்லையாம். அப்படி எதுவும் இருப்பதாக அதில் நடித்த நடிகர்களே அறியவில்லை. படத்தின் இயக்குநர் ஆலன் ராபர்ட்ஸ் இதற்கு முன்பு மென்மையான ஆபாசப் படங்கள் தயாரித்தவராம். இப்படிப்பட்ட ‘தகுதிமிக்க’ இவருக்கே இந்த வசனங்கள் எப்படிச் சேர்க்கப்பட்டன என்பது தெரியாதாம். பின் எப்படி நிகழ்ந்தது? படத்தின் கதையைவிட படம் எடுக்கப்பட்ட கதை மிகவும் திகிலாக இருக்கிறது. இஸ்லாத்துக்கு எதிரான சிந்தனைகளும் முகமது நபிகளை இழிவுபடுத்தும் வசனங்களும் திரைப்படத்திற்கான பிந்தைய தயாரிப்புப் பணிகளில் (Post production) ‘டப்பிங்’ முறையில் சேர்க்கப்பட்டிருக்கின்றன. அதாவது, நடிகர் ஒரு வசனத்திற்கு வாயசைத்துக் காட்சியைப் பதிவு செய்ய, டப்பிங் கலைஞர் வேறெரு வசனத்தைப் பேசிப் பதிவு செய்திருக்கிறார். மிகப் பெரிய சதித்திட்டம் முறைப்படி அரங்கேறியிருக்கிறது. ஆக, அறிவியல் கற்பனைக் கதையில் மத அரசியல்! கொஞ்சம் அசந்தால், பாட்டி வடை சுட்ட கதையில்கூட மத அரசியலைத் திணித்துவிடுவார்கள் போலிருக்கிறது! இவ்வாறு டப்பிங் முறையில் தயாரிக்கப்பட்ட 13 நிமிட முன்னோட்டத் திரைப்படத்தில்தான் இஸ்லாத்திற்கு எதிரான பல கூறுகளை அள்ளித் தெளித்திருக்கிறார்கள். இந்த முன்னோட்டத்தைத்தான் யூடியூப்பில் பதிவேற்றம் செய்திருக்கிறார்கள். இந்தப் பதிவிறக்கம்தான் உலகமயமாகி தற்போது பற்றி எரிந்துகொண்டிருக்கிறது. இப்பிரச்சனை வெடித்தபிறகு, இப்படத்தை இயக்கிய ஆலன் ராபர்ட்ஸ் என்பவரும், நடித்த பிற நடிகர்களும் தாங்கள் ஏதோ சூழ்ச்சிக்குப் பலியாகிவிட்டதாகக் குறிப்பிடுகிறார்கள். அதாவது, படத்தின் இயக்குநரையே வேறு யாரோ இயக்கியிருக்கிறார்கள். ஏதோ விட்டாலாச்சாரியார் படம் பார்த்த மாதிரியாக அல்லவா இருக்கிறது! நடித்தவர்களுக்கு தங்கள் கதாப்பாத்திரத்தின் தன்மை என்னவென்பது தெரியாமல் அவர்களைச் சிக்க வைப்பதும், தான் ஒரு சூழ்ச்சிக்குப் பலியாகிவிட்டதாக இயக்குநர் குறிப்பிடுவதையும் மிகப் பெரிய அறநெறி மீறலாகவே கருதவேண்டும். அப்படியானால், அந்த சூத்திரதாரி யார்? இக்கேள்விக்கான பதிலில்தான் அமெரிக்காவின் அரசியல் அடங்கியிருக்கிறது. இப்படத்தைத் தயாரித்தவர் சாம் பகைல். இவர் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி சிறைத்தண்டனை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பகைல் ‘ரியல் எஸ்டேட்’ தொழில் செய்துவந்த ஓர் இஸ்ரேலியர். இந்தப் படத்திற்கான தயாரிப்புச் செலவு 5 மில்லியன் டாலர்கள். இந்தத் தொகையை 100க்கும் மேற்பட்ட யூதர்களிடமிருந்து வசூலித்திருக்கிறார். இவர்கள் எல்லாம் இஸ்ரேலின் ஆதிக்கத்தை வலியுறுத்தும், இஸ்லாத்தை எதிர்க்கும் ‘சீயோன்’ அமைப்பைச் சார்ந்தவர்கள். இந்தத் தகவலை எரியும் பிரச்சனையோடு தொடர்புபடுத்தினால், அமெரிக்க - இஸ்ரேல் - பாலஸ்தீனம் - முஸ்லீம் என்ற அரசியல் பரிமாணம் நம் நினைவுக்கு வருவதைத் தவிர்க்க முடியவில்லை. வெறும் பத்துப் பேருக்கும் குறைவானவர்கள் திரையரங்கில் பார்த்தத் திரைப்படத்தை, இணையத்தில் வெளியிட்டுப் பரபரப்பாக்கி வசூல் வேட்டை செய்துள்ள இவர்களின் வியாபாரத் தந்திரத்தையும் சுட்டிக்காட்டாமல் இருக்க முடியவில்லை. இப்படங்களை அரசு தணிக்கை செய்யவில்லையா என்ற கேள்வி எழலாம். கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் இத்தகையத் திரைப்படங்கள் அமெரிக்காவில் நம் நாட்டைப் போன்று தணிக்கை செய்யப்படுவது கிடையாது. அமெரிக்காவில் தணிக்கை செய்யும் பொறுப்பை ஒரு தனியார் அமைப்பு செய்து வருகிறது. இவர்களது வேலை என்னவென்றால், எந்தத் திரைப்படத்தை எந்த வயதினர் பார்க்கலாம் என்பதை வரையறுத்துச் சான்றிதழ் வழங்குவது மட்டுமே. அது நல்ல படமா, கெட்ட படமா என்று தீர்மானிக்கும் வேலை எல்லாம் அவர்களுக்குக் கிடையாது. இதனால்தான், பதிவேற்றம் செய்யப்பட்ட யூடியூப் இணையத்தை இப்பிரச்சனையில் தங்களால் கட்டுப்பட்டுத்த இயலாது என்று கையை விரிக்கிறது அமெரிக்கா. இந்தத் திரைப்படத்தை இஸ்லாத்திற்கு எதிரான கருத்தியல் மோதல் என்று வெறுமனே எடுத்துக்கொள்ள முடியாது. முகமது நபிகளை போலியான சமயவாதியாகவும், முட்டாளாகவும், காமுகனாவும் சித்தரித்திருக்கிறார்கள். கழுதையைப் பார்த்து ‘முதல் முஸ்லிம் விலங்கு’ என்கிறார்கள். என்னதான் இஸ்லாத்தின் கருத்தியலை கருத்துரிமையோடு விமர்சிக்கிறோம் என்று சமாதானம் சொன்னாலும், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் வன்மம், காழ்ப்புணர்ச்சி, பகைமை, வக்கிரம் ஆகியவையே இத்தகையக் காட்சிகளில் மேலோங்கி இருக்கின்றன. முகமது நபிகளை ஒரு சித்திரமாகவோ, நிழல்படமாகவோ, கற்பனை ஓவியமாகக்கூடப் பார்க்க விரும்பாது, அவரை மனதில் ஏற்றி வைத்திருக்கும் இஸ்லாமியச் சமூகத்திற்கு இத்திரைப்படம் மிகப் பெரிய அதிர்ச்சியை அளித்திருக்கும் என்பதை எளிதில் புரிந்துகொள்ளலாம். சமயம் குறித்த நேர்மறையான விவாதத்திற்குள் அல்லது கலந்துரையாடலுக்குள் இறங்காமல், சமயரீதியான உளவியலைக் காயப்படுத்தி, உணர்வுத் தளத்தைச் சீண்டிப்பார்த்துக் குளிர்காயும் அமெரிக்காவின் வக்கிர அரசியல் இதில் இழையோடுகிறது. இவ்வளவு பெரிய ஏகாதிபத்தியப் பின்புலத்தைக் கொண்ட இப்பிரச்சனையை, ஒரு படைப்பாளியின் தனிப்பட்ட கருத்துச் சுதந்திரம் என்ற கோணத்திலும் நாம் எடுத்துக்கொள்ள முடியாது. அமெரிக்காவின் ஊடக அதிகாரம் என்பது குறிப்பிட்ட இஸ்ரேல் சமூகத்தைச் சார்ந்தவர்களிடமே அதிகமாக உள்ளது என்று பல புள்ளிவிவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. இஸ்ரேல் - அமெரிக்க உறவு அரசியலைத் தவிர்த்துவிட்டு, இந்தக் கருத்துச் சுதந்திரத்தைப் பேச முடியுமா? மேலும், ஊடகங்களில் கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் தொடர்ச்சியாக ஒரு சில சமூகங்கள் மட்டுமே தாக்குதல்களுக்கு உள்ளாகி அவமானப்படுத்தப்படுவது எப்படி ? கருத்துச் சுதந்திரத்திற்கு முன்பாக, ஊடக வலிமை, ஊடக அதிகாரம் என்பன யார் கையில் இருக்கின்றன என்பதே இன்றைய கேள்வி. அமெரிக்காவுக்கு இணையாக ஊடகங்களை, குறிப்பாக, சமூக இணையதளங்களை ஆக்கிரமிக்கும் அதிகாரம் இஸ்லாமிய நாடுகளுக்கு ஒப்பீட்டளவில் இல்லை எனலாம். அந்த வகையில், அத்ததைய அதிகாரமும் வலிமையும் குறைவாகக்கொண்ட மக்கள்மீது தொடர்ந்து தாக்குதல் நடத்துவது என்பது நிராயுதபாணி மீது நடத்தும் தாக்குதல்தானே ! இதில் ஊடகம் ஏற்படுத்தும் தாக்கம்தான் நாம் அதிகம் கவனத்தில் கொள்ளத்தக்கது. திரைப்படம் என்பது திரையரங்கில் மட்டுமே பார்க்கக்கூடிய காலமெல்லாம் மலையேறிப் போய்விட்டது. இன்றைக்கு இணையத்தில் யூடியூப்பின் பயன்பாடு மிகப்பெரும் வீச்சைக் கொண்டது. இதனால்தான், இஸ்லாம் மீதான கட்டுடைப்பை இப்படம் முன்வைக்கிறது என்பதைவிட, நொடியில் ஒரு பரப்புரை நடந்துவிடுகிறது என்பதே இப்பிரச்சனையின் மையம். இஸ்லாமியர்களின் காயப்பட்ட உணர்வு என்பது ஒருபுறமிருக்க, இஸ்லாமியர் அல்லாத மக்களிடம், குறிப்பாக இளைஞர்களிடம், இஸ்லாம் பற்றி நடந்த பரப்புரைக்குப் பதில் என்ன என்பதே இப்பிரச்சனையின் வேகத்தை அதிகரித்திருக்கிறது. இத்திரைப்படத்தை இணையத்தில் பார்த்தவர்கள் அத்தனை பேரும் இந்த அமெரிக்க ஊடக அரசியலைப் புரிந்துகொண்டிருப்பார்கள் என்று சொல்வதற்கில்லை. ஊடக அதிகாரத்தின், வலிமையின் மையப் புள்ளி இந்தப் பரப்புரையில்தான் அடங்கியிருக்கிறது. மேலும், இத்திரைப்படத்தைப் பார்த்தவர்கள் இணையத்தில் முகமது நபிகள் குறித்த விவாத்தில் இறங்கியிருக்கிறார்கள். இந்த விவாதங்கள் முகமது நபி குறித்த கட்டுடைப்புக்கு வழிவகுக்கின்றன. இதுவும் இந்தப் பரப்புரையின் வெற்றிதான். இன்னொரு வகையில் பார்த்தால், மேற்கு உலகு நாடுகளுக்கும் இஸ்லாமிய நாடுகளுக்கும் இடையே நடைபெற்று வரும் பகைமைப் போட்டியில், இஸ்லாமிய நாடுகள் இப்பிரச்சனையில் தற்காப்பு நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றன. இதனால்தான், இப்பிரச்சனையில் போராடுபவர்களின் பார்வை யூடியூப்பிலும் கூகுளிலும் பதிந்திருக்கிறது. ஒரு சில நாடுகள் இப்படத்திற்கு தடை விதித்திருந்தாலும், இந்த இணையதளங்கள் இப்படத்தை நீக்க மறுத்துவிட்டன. அந்த வகையில் ஊடகத்தின் வலிமை மீண்டும் ஒருமுறை சுட்டிக் காட்டப்பட்டிருக்கிறது. ஆதிக்க ஊடகங்கள் பரவலாகப் பயன்படுத்தும் ஒரு சொற்றொடர் - இஸ்லாமியப் பயங்கரவாதம். ஊடகங்களின் பயன்பாட்டில் இருந்த சொற்கள் இன்றைக்கு சமூகத்தின் பொதுச் சிந்தனையில் விதைக்கப்பட்டிருக்கின்றன. இந்தக் கருத்தியலை பொதுச் சிந்தனையில் உள்வாங்கிக் கொண்டவர்களுக்கு, இத்திரைப்படம் ஒரு வலுவூட்டலாகவே அமையும் என்பதில் ஐயமில்லை. தனக்கான ஓர் எதிரியைக் கட்டமைத்து தன் வல்லாதிக்கத்தை நிலைநாட்டுவது ஏகாதிபத்திய மனோபாவம். அந்த வகையில், அமெரிக்காவின் ஒட்டுமொத்த இஸ்லாமிய எதிர்ப்பின் வெளிப்பாடுதான் இந்தத் திரைப்படம். சில ஆண்டுகளுக்கு முன்னால் ஆப்கானிஸ்தானில் இஸ்லாமியர்களின் புனித நூலான திருக்குரானை அமெரிக்கப் படைவீரர்கள் கொளுத்திய செய்தியை இந்த மனோபாவத்தோடு தொடர்புபடுத்திப் பார்க்க வேண்டும். ஹாலிவுட் திரைப்படங்களில் இஸ்லாத்தின் மீதான இத்தகையத் தாக்குதல் ஒன்றும் புதிதல்ல. அவர்களது திரைப்படங்களில் பல ஆண்டுகளாகவே எதிர்மறையானச் சித்தரிப்புகளுக்கு ஆளானவர்களின் பட்டியலில் கறுப்பு இன மக்களும் கம்யூனிசவாதிகளும் முஸ்லீம்களும் அடங்குவர். அதன் ஒரு மிகையான வெளிப்பாடுதான் இத்திரைப்படம். இன்னும் சொல்லப் போனால், இது இஸ்லாத்திற்கு எதிரான அமெரிக்காவின் ஊடகப் போர் என்றே சொல்ல வேண்டும். இவை எல்லாவற்றையும்விட, இன்று அமெரிக்கா சந்தித்துக் கொண்டிருக்கும் பல்வேறு உள்நாட்டு, வெளிநாட்டுப் பிரச்சனைகளைத் திசை திருப்பி விட்டிருக்கிறது இந்தப் பிரச்சனை. thanks : keetru

இலங்கை - கிழக்கின் ஆட்சியைத் தீர்மானிக்கும் முஸ்லிம் காங்கிரஸ்!


இலங்கையில் மூன்று மாகாணங்களுக்கு கடந்த 8ம் தேதி நடைபெற்ற தேர்தலில் முக்கியக் கட்சிகள் போட்டியிட்டன. தமிழ் கட்சிகளும் களத்தில் நின்ற இந்தத் தேர்தல் முடிவு கள் மறுநாள் 9ம் தேதி வெளியிடப்பட்டன. இதில் ராஜ பக்சேவின் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி கட்சி பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. வட மத்திய மாகாணத்தில் 33 இடங்க ளுக்கு நடந்த தேர்தலில் 21 இடங்கள் ஐக்கிய சுதந்திரக் கூட்டணிக் கட்சிக்கு கிடைத்துள்ளது. ரணில் விக்கிரம சிங்கே வின் ஐக்கிய தேசியக் கட்சிக்கு 11 இடங்க ளும், விமல் வீரவன்சயின் சிங்கள கட்சி யான ஜே.வி.பி.க்கு ஒரு இடமும் கிடைத் துள்ளது. சபரகமுவ மாகாணத்தில் ஐ.ம.சு. கூட் டணிக்கு 2 போனஸ் இடங்கள் உள்பட 28 இடங்களும், ஐக்கிய தேசிய கட்சிக்கு 14 இடங்களும், ஸ்ரீலங்கா தொழிலாளர் காங்கிரஸ் கட்சிக்கு 2 இடங்களும் கிடைத் துள்ளன. கிழக்கு மாகாணத்தில் ராஜபக்சேவின் கட்சி 14 இடங்களிலும், தமிழர் தேசிய கூட் டணி 11 இடங்களிலும் வெற்றி பெற்றுள் ளன. இதே மாகாணத்தில் ஸ்ரீலங்கா முஸ் லிம் காங்கிரஸ் 7 இடங்களை கைப்பற்றி யுள்ளது. தேசிய சுதந்திர முன்னணி ஒரு இடத்திலும், ஐக்கிய தேசிய கட்சி 4 இடங்க ளிலும் வெற்றி பெற்றுள்ளன. இந்த மூன்று மாகாணத் தேர்தல்களி லும் தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு மத்தியில் வெகுவாக எதிர்பார்க்ககப்பட்ட கிழக்கு மாகாணத் தேர்தலில் ராஜபக்சே வின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்ட ணிக்கு 14 இடங்கள் கிடைத்துள்ளன. திரிகோணமலை, அம்பாறை, மட்டக் களப்பு ஆகிய மாவட்டங்களில் ராஜபக்சே வின் தேர்தல் சுற்றுப் பயணம் தீவிரமாக இருந்தது. இங்கு முஸ்லிம்களைக் கவரும் வகையில், பள்ளிவாசல்கள் மீது தாக்கு தல் நடத்தப்படுவதை அனுமதிக்க மாட் டோம்; இந்திய வீடமைப்பு திட்டத்தில் இடம் பெயர்ந்த முஸ்லிம்களுக்கும் வீடு களை ஒதுக்குவோம் என்பது போன்ற வாக்குறுதிகளை அளித்ததோடு, வடக்கி லிருந்து இடம் பெயர்ந்த அகதிகள் விஷ யத்தில் - யுத்தத்தின் இறுதி கட்டத்தில் இடம் பெயர்ந்த அகதிகள், அதற்கு முன் இடம் பெயர்ந்த அகதிகள் என்ற பாகுபாடு பாராமல் தமிழ், முஸ்லிம் அகதிகளுக்கு அரசின் அபிவிருத்தித் திட்டங்களும், சலு கைகளும் கிடைக்கும் என்றும் அறிவித்து தேர்தல் பிரச்சாரத்தின்போதே அதற்கான உத்தரவையும் வெளியிட்டார் ராஜ பக்சே. அதே போன்று தமிழ் மக்களுக்கும் சலுகை வாக்குறுதிகளை அள்ளி வீசினார் ராஜபக்சே. இதனால்தான் அவரது கட்சி 14 இடங்களைப் பெற முடிந்தது என்கின்றன இலங்கை ஊடகங்கள். கிழக்கு முஸ்லிம்கள் மத்தியில் எதிர் பார்க்கப்பட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கி ரஸ் மூன்று மாவட்டங்களிலும் 7 இடங்க ளைக் கைப்பற்றியுள்ளது. ஐக்கிய தேசி யக் கட்சி 4 இடங்களையும், தேசிய சுதந் திர முன்னணி ஒரு இடத்தையும் கைப்பற் றியுள்ளது. கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவ ரையில் முஸ்லிம்களின் வாக்குகள் இரண்டு பிரிவாக விழுந்துள்ளன. அதா வது, ஆளுங்கட்சிக்கும், முஸ்லிம் காங்கி ரசுக்குமே முஸ்லிம்களின் வாக்குகள் விழுந்துள்ளன. இதனால் ஒரு புறம் முஸ்லிம் காங்கிரசுக்கு இழப்புதான். இதில் முஸ்லிம் சுயேட்சைகள் வேறு களமிறங் கியதால் மு.கா. கட்சிக்கு கிடைக்க வேண் டிய சில இடங்கள் பறி போயுள்ளன. அம்பாறை மாவட்டத்தில் ஐக்கிய மக் கள் சுதந்திரக் கூட்டணிக்கு 5 இடங்க ளும், முஸ்லிம் காங்கிரசுக்கு 4 இடங்க ளும் கிடைத்துள்ளன. இதில் அம்பாறை தொகுதியை ஐ.ம.சு கட்சி கைப்பற்றியுள் ளது. இதே மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சி 3 இடங்களையும், இலங்கை தமிழ ரசுக் கட்சி 2 இடங்களையும் கைப்பற்றியி ருப்பது குறிப்பிடத் தக்கது. திரிகோணமலை மாவட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சி 3 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. ஐ.ம.சு. கூட்டணிக்கு 3 இடங்களும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கி ரஸ் 2 இடங்கûளையும் கைப்பற்றியுள் ளன. தேசிய சுதந்திர முன்னணியும், ரணில் விக்ரமசிங்கேவின் ஐக்கிய தேசி யக் கட்சியும் இங்கே தலா ஒரு இடத்தைப் பிடித்துள்ளன. மட்டக் களப்பு மாவட்டத்தைப் பொறுத் தவரை இலங்கை தமிழரசுக் கட்சியே வெற்றி பெற்றுள்ளது. இங்கு 6 இடங் களை அது கைப்பற்றியுள்ளது. ராஜபக்சே வின் ஐ.ம.சு. கூட்டணி 4 இடங்களையும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒரு இடத் தையும் பெற்றுள்ளன. ரணில் கட்சியின் ஐக்கிய தேசிய கட்சி மட்டக்களப்பு மாவட் டத்தில் முழுமையாக தோல்வியடைந் துள்ளது. எது எப்படியிருப்பினும் தற்போதைய சூழலில் கிழக்கு மாகாணத்தில் ஆட் சியமைப்பதற்கு 19 இடங்கள் தேவைப்படுகின்றன என்கிற நிலையில் முஸ்லிம் காங்கி ரஸ் கட்சியின் 7 இடங்கள் முக்கியத்துவம் பெற்றுள் ளன. திரிகோண மலையில் தனித்துப் போட்டியிட்ட ஜே.வி.பி. கட்சியின் விமல் வீரவன்ச அங்கு வெற்றி பெற்றுள்ளதால் அவரது ஆதரவு ராஜபக்சேவின் ஐ.ம.சு கூட்டணி க்கு என்று வைத்துக் கொண்டாலும் அது ஐ.ம.சு. கூட்டணிக்கு மொத்தம் 15 இடங்க ளாகவே இருக்கும். அதே சமயம், தமிழ் தேசியக் கூட்ட மைப்புக்கு 11 இடங்கள் கிடைத்திருப்ப தால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்தால் 18 இடங்களுடன் ஆட்சியதிகாரம் பெற வாய்ப்பு உள்ளது. ரணில் விக்கிரமசிங்கேவின் ஐக்கிய தேசியக் கட்சியும், தமிழ் தேசியக் கூட்ட மைப்பும் இணைந்தால் 15 இடங்கள் கிடைக்கும். அப்போதும் ஆட்சியமைக்க முஸ்லிம் காங்கிரசின் ஆதரவு தேவைப்ப டும். இப்படி தனிப்பெரும்பான்மை எக்கட் சிக்கும் கிடைக்காமல் நடந்து முடிந்துள் ளது கிழக்கு மாகாணத் தேர்தல். இந்நி லையில், கிழக்கின் அதிகாரத்தை தீர்மா னிக்கும் சக்தியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இருக்கிறது. கிழக்கு மாகாணத்தில் ஆட்சியமைப் பது தொடர்பாக தமிழ் தேசியக் கூட்ட மைப்பின் தலைவர் இரா. சம்மந்தன் முதலாவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூஃப் ஹக்கீ முக்கு அழைப்பு விடுத்திருக்கிறார். அதிபர் ராஜபக்சேவும் தனது கட்சி யின் எம்.பி.யான சஜின்வாஸ் குண வர்த்தன மூலம் ரஃவூப் ஹக்கீமிடம் பேசியிருக்கிறார். ஆயினும் யாருக்கு ஆதரவு என்பது குறித்து கடந்த 9ம் தேதி இரவுவரை ரவூஃப் ஹக்கீம் முடிவு செய்யவில்லை எனத் தெரிகிறது. எப்படியிருப்பினும் கிழக்கு மாகாண சபைக்கு எல்லாக் கட்சிகளிலிருந்தும் 15 முஸ்லிம் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட் டுள்ளனர் என்பதை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கின்றனர் கிழக்கு மாகாண முஸ்லிம்கள். முஸ்லிம் முதலமைச்சர் கிழக்கு மாகாணத் தேர்தலில் ஆட்சியமைப்பதற்கான சாவியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இருக்கிறது'' எனத் தெரிவித்திருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், கிழக்கு மாகாணத்தில் ஆட்சியமைக்க உரிமைகோரி கடிதம் ஒன்றை மாகாண ஆளுநர் மொஹான் விஜே விக்ரமவிற்கு அனுப்பியிருக்கிறார். தமிழ் பேசும் மக்களுக்கு நிம்மதியான வாழ்வே இன்றையத் தேவை எனக் கூறும் சம்பந்தன், “கிழக்கு மாகாண சபையில் கூட்டாட்சியை ஏற்படுத்துவதற்கு தாராளமான விட்டுக் கொடுத்தல்களுடன் செயல்பட தமிழ் தேசிய கூட்டமைப்பு தயா ராக உள்ளது. தேவையானால் முஸ்லிம் முதலமைச்சரையும் முஸ்லிம் காங்கிரஸ் பெற்றுக் கொள்ள முடியும்...'' என்று கூறியுள்ளார். கூட்டமைப்பின் யாழ் மாவட்ட எம்.பி.யான பிரேமச் சந்திரனோ, “தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு 11 இடங்கள் கிடைத்துள்ளன. ஐ.தே. கட்சியும் எங்களுக்கு ஆதரவ ளிப்பதாக உறுதி கூறியுள்ளது. அதனால் 15 இடங்கள் எங்களுக்கு உள்ளன. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுடன் பேச்சு நடத்தி வருகிறோம். கிழக்கில் சிறுபான்மை கட்சிகள் ஆட்சியமைக்கும் திட்டத்திற்காக முதலமைச்சர் பதவியை பகிர்ந்து கொள்ளவும் தயாராக இருக்கிறோம்...'' எனத் தெரிவித்துள்ளார். இந்நிலையில் கிழக்கிற்கு முஸ்லிம் முதலமைச்சர் கிடைப்பார் என்ற எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள் கிழக்கு மாகாண முஸ்லிம்கள் என்பது நமக்கு கடந்த 10ம் தேதி மாலை கிடைத்த கடைசி தகவல்.

கனடாவில் முழு படத்தையும் திரையிடப் போகின்றேன் – பாஸ்டர் Terry Jones!, பேசவிட்டு வேடிக்கை பார்க்கும் அமெரிக்க அரசு!


குர்ஆனை எரித்த அமெரிக்க ஃப்லோரிடா பாதிரி அடுத்த மாதம் கேனடா டோரோண்டோவிற்கு செல்கின்றான். அப்போது நபிகள் நாயகத்தை கொச்சைப்படுத்தி எடுக்கப்பட்ட படத்தை முழுவதுமாக டோரோண்டோவில் திரையிடப் போவதாக அறிவித்து Terry Jones அமெரிக்காவில் பெரும் பரபப்பை ஏற்படுத்தியுள்ளான். அந்த படத்தின் முழு காபியை பெருவதற்கு முயற்சி செய்து கொண்டிருப்பதாகவும் , தினமும் அந்த படத்தை தயாரித்தவரிடம் இது குறித்து பேசிக் கொண்டிருப்பதாவும் தெரிவித்துள்ளான். இந்த படத்தின் முழுமையான காபி ஒன்று தான் இருக்கின்றது. அதை மிகவும் பத்திரமான இடத்தில் வைத்திருப்பதாக படத்தயாரிப்பாளன் கூறியதாக இந்த பாஸ்டர் (நாம் பாதிரி என்ற கருத்தில் எழுதியுள்ளோம்) தெரிவித்துள்ளான். Canadians United Against Terror என்ற அமைப்பால் இந்த பாஸ்டர் கெனடாவிற்கு அடுத்த மாதம் அழைக்கப்பட்டுள்ளான். இந்த அமைப்பு ஏற்கனவே நபிகள் நாயக்தை கொச்சைபடுத்தும் படத்தை கெனட நாட்டின பல பகுதிகளில் திரையிட முயற்சி செய்து கொண்டிருகின்றது. அங்கு ஒரு விவாதம் நடைபெறுகின்றதாம் அதில் இவன் கலந்து கொள்கின்றானாம். அந்த விவாதத்திலும் இந்த படத்தை பாஸ்டர் Terry Jones திரையிடப்ப போகின்றானாம்.
முஹம்மது நபியின் விபரீதிமான மற்றும் தீவிரவாத வாழ்கையை இந்த படம் வெளிப்படுத்துகின்றது என பாஸ்டர் Terry Jones கூறியுள்ளான். இந்த பாஸ்டரின் வெறுக்கதக்க மற்றும் வன்முறையை தூண்டும் விதமான பேச்சின் காரணமாக பிரிண்டன் மற்றும் ஜெர்மனியில் இந்த பாஸ்டர் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே இவன் அமெரிக்க பார்டரை தாண்டுவதற்கு அனுமதிக்கப்படுவானா என்பதில் சிக்கல் உள்ளதாம். இவனை அனுமதிப்பீர்களா என்று கேட்கப்பட்டதற்கு கெனட நாட்டு அதிகாரிகள் கருத்து சொல்ல மருத்து விட்டனர் என்பது குறிப்பிடதக்கது. இவனை பேச விட்டு வேடிக்கை பார்த்து கொண்டிருக்கின்றது அமெரிக்க அரசு.. படத்தை எடுத்தவனையும் ஒன்னும் செய்யவில்லை. அதை ஊக்குவித்து பல நாடுகளில் திரையிடப் போகின்றேன் சொல்லிக் கொண்டு திரியும் பாதிரியையும் ஒன்னும் செய்யவிலலை… ஆனால் தாங்கள் என்னவோ முஸ்லிம்களுக்கு விரோதி இல்லை என்பது போல் ”எங்களுக்கு இதுக்கும் சம்பந்தம் இல்லை நாங்கள் இதை மறுக்கின்றோம்” என டிவிகளில் விளம்பரம் மட்டும் கொடுக்கின்றது இந்த அமெரிக்க அரசு.. யாரை ஏமாற்ற பார்க்கின்றார்கள் ?

பி.ஜே அவர்கள் தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கை:


யூ டியூப் என்ற அயோக்கிய நிறுவனம் மதங்களை நிந்தனை செய்யக் கூடாது என்ற விதியின் கீழ் செயல்படுவதாக சொல்லிக் கொண்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறித்த கீழ்த்தரமான வீடியோவை நீக்க முடியாது. எங்கள் விதிமுறைக்கு உட்பட்டே அது உள்ளது என்று திமிராக பதில் சொல்கிறது. இதன் தயாரிப்பில் யூ டிய்ய்புக்கும் பங்கு உண்டு என்ற சந்தேகம் இதனால் வலுப்படுகிறது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை உயிரினும் மேலாக நேசிக்கும் ஒவ்வொருவரும் அடுத்தவரை எதிர்பார்த்து காத்துக் கொண்டிராமல் தன்னால் இயன்ற அளவுக்கு யூடியூபுக்கு நட்டத்தை ஏற்படுத்த வேண்டும். இது போன்ற விஷமத்தனமான ஒரு தளம் உலகில் இருப்பதே மிகவும் ஆபத்தானது என்ற அச்சம் இதனால் ஏற்படுகிறது. இன்னும் பல ஆபாசங்களையும் அவதூறுகளையும் அள்ளித் தெளிக்க யூ டியூப் தயாராக இருப்பதை நாம் உணர முடிகின்றது. எனவே இதன் முதல் கட்டமாக அனைத்து கொள்கைச் சகோதர்ர்களுக்கும் முக்கிய வேண்டுகோளை முன்வைக்கிறேன்.
எனது உரைகள் கேள்வி பதில்கள் இஸ்லாம் இனிய மார்க்கம் போன்ற அனைத்தையும் பல்வேறு சகோதர்ர்கள் யூடியூபில் பதிந்துள்ளனர். யாரெல்லாம் எனது உரைகளை யு டியூபில் பதிந்துள்ளார்களோ அவர்கள் அனைவரும் பதிந்துள்ள எனது அனைத்து ஆக்கங்களையும் உடனே நீக்கி விடுமாறு கேட்டுக் கொள்கிறேன். எனது உரையைத் தேடி இந்தக் கேடு கெட்ட தளத்துக்குச் செல்பவர்கள் நபிகள் நாயகத்துக்கு எதிரான் நச்சுக்கருத்துக்களையும் பார்க்க நான் காரணமாக ஆக விரும்பவில்லை. இதனால் மிகச் சில அளவுக்கு யூ டியூபின் பார்வையாளர்கள் குறைவார்கள். இதை மற்றவர்களும் கடைப்பிடித்து இது உலக முஸ்லிம்களை சென்றடையும் என்று நம்ப்வுகிறேன். அப்போது யூடியூபுக்கு தக்க பாடமாக அமையும் என்று நான் கருதுகிறேன். மீண்டும் சொல்கிறேன். எனது கேள்வி பதில்கள் எனது உரைகள் எனது எழுத்துக்கள் எனது தளத்துக்கான லிங்குகள் உள்ளிட்ட எதுவும் யூடியூபில் இருக்க வேண்டாம். பதிவு செய்துள்ள அனைவரும் தாமதமின்றி அவற்றை நீக்கி உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன். கூகுளுக்கும் ஜி மெயிலுக்கும் எதிராக நாம் எத்தகைய பதிலடி கொடுக்கலாம் என்பதை ஆலோசித்து தலைமை மூலம் விரைவில் தக்க முடிவை அறிவுக்குமாறு மாநில நிர்வாகிகளுக்கு கோரிக்கை வைத்துளேன். இன்ஷா அல்லாஹ் ஆர்ப்பாட்டங்களால் அளிக்கும் பதிலடியை விட பார்வையாளர்களைக் குறைத்து விளம்பர வருவாயைக் குறைப்பது இந்தக் கயவர்களுக்கு மிகப் பெரிய பதிலடியாக அமையும். பீஜே அல்லது ஜைனுல் ஆபிதீன் என்று தேடினால் யூடியூபில் எதுவும் இல்லாமல் இருக்க அனைவரும் உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன். அன்புடன் பீ.ஜைனுல் ஆபிதீன்

திங்கள், 24 செப்டம்பர், 2012

இறைத்தூதருக்கு அவமதிப்பு: ஈரானில் ஜி மெயிலுக்கு தடை!


டெஹ்ரான்:இறைத்தூதரை அவமதிக்கும் அமெரிக்க திரைப்படத்தை கண்டித்து மின்னஞ்சல் சேவை இணையதளமான ஜிமெயிலுக்கு ஈரான் தடை விதித்துள்ளது. ஈரான் செய்தி நிறுவனமான மெஹர் இச்செய்தியை வெளியிட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை முதல் ஈரானில் ஜிமெயில் முடக்கப்பட்டது. கூகிளின் வீடியோ பகிர்வு இணையதளமான யூ ட்யூப் இஸ்லாத்தின் இறுதித் தூதரும், முஸ்லிம்களின் உயிரினும் மேலான முஹம்மது நபி(ஸல்)அவர்களை இழிவுப்படுத்தும் அமெரிக்க திரைப்படத்தின் காட்சிகளை வெளியிட்டது. யூ ட்யூபிற்கு ஏற்கனவே ஈரான் தடைவிதித்துள்ளது. இந்நிலையில், ஆஸ்கர் விருது அமைப்பாளர்கள் இத்திரைப்படத்தை கண்டிக்காவிட்டால் ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்ச்சியை புறக்கணிக்கப் போவதாக ஈரான் அறிவித்துள்ளது. மிகச்சிறந்த வெளிநாட்டு திரைப்படப் பிரிவில் ஈரானின் ரிஸா மிர்கராமியின் வன் பீஸ் ஆஃப் க்யூப் ஷுகர் என்ற திரைப்படம் பரிந்துரைச் செய்யப்பட்டுள்ளது. இதனிடையே க்ரீஸ் நாட்டில் இறைத்தூதரை அவமதிக்கும் திரைப்படத்திற்கு எதிராக போராட்டம் நடத்திய 40 பேரை போலீஸ் கைது செய்துள்ளது. ஏதன்ஸில் போராட்டத்தின் போது போலீசாருடன் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து கைது நடந்துள்ளது. பாகிஸ்தானின் பலுசிஸ்தான் சட்டப்பேரவை இத்திரைப்படத்தை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இஸ்லாம் மற்றும் இறைத்தூதருக்கு எதிரான அவமதிப்புகளை கட்டுப்படுத்த அமெரிக்கா தயாராகவேண்டும் என்று அத்தீர்மானத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கையிலும் இறைத்தூதரை அவமதிக்கும் திரைப்படத்திற்கு எதிராக போராட்டங்கள் நடந்தேறின.

இலங்கை கிழக்கு மாகாண சபை: 4 முஸ்லிம் அமைச்சர்கள் பதவியேற்பு!


கொழும்பு:இலங்கை கிழக்கு மாகாண சபையில் 4 முஸ்லிம்கள் அமைச்சர்களாக நேற்று (திங்கள் கிழமை) பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர். 37 உறுப்பினர்கள் கொண்ட கிழக்கு மாகாண சபையில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கரஸின் உதவியுடன் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியது. 22 உறுப்பினர்களை கொண்டுள்ள ஆளும் தரப்பில் 14 பேர் முஸ்லிம்கள் , 6 பேர் சிங்களவர்கள் ,2 பேர் தமிழர்கள் ஆவர்..
இந்நிலையில் ஜனாதிபதி மகிந்தா ராஜபக்சே முன்னிலையில் நேற்று(திங்கள் கிழமை) புதிய அமைச்சர்கள் பதவிப் பிரமானம் செய்துகொண்டனர். மாகாண முதலமைச்சராக பதவியேற்றுள்ள நஜீப் ஏ மஜீத் நிதி, திட்டமிடல், சட்டம், ஒழுங்கு, மாகாண நிர்வாகம், சுற்றாடல், மீள் குடியேற்றம் மற்றும் உள்ளுராட்சி கிராம வளர்ச்சி ஆகிய துறைகளை கவனிப்பார். இலங்கை முஸ்லிம் காங்கிரஸைச் சேர்ந்த எம்.ஐ.எம்.மன்சூருக்கு சுகாதாரம், உள்நாட்டு மருத்துவம், விளையாட்டு, உணவு விநியோகம், மகளிர், சிறுவர் மற்றும் இளைஞர் விவகாரம், கூட்டுறவு, சமூக சேவைகள் ஆகிய துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஜைனுல் ஆபிதீன் அஹ்மத் நஸீருக்கு விவசாயம், கால்நடை அபிவிருத்தி, சுற்றாடல், கிராமிய கைத்தொழில் மற்றும் மீன்பிடித்துறை ஆகிய துறைகளும், தேசிய காங்கிரஸைச் சேர்ந்த எம்.எஸ். உதுமான் லெப்பைக்கு வீதி அபிவிருத்தி, நீர்பாசனம் வீடு அமைப்பு, நிர்மாணத்துறை, கிராமிய மின் மற்றும் நீர் வழங்கல் ஆகிய துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அமைச்சர்கள் பதவியேற்பு விழாவில் இலங்கை மத்திய அமைச்சர்களான றவூப் ஹக்கீம், அதாவுல்லா உட்பட அமைச்சர்கள் பலரும் கலந்து கொண்டனர்

நார்வே அமைச்சராக முஸ்லிம் பெண் நியமனம்!


ஓஸ்லோ:நார்வே நாட்டின் கலாச்சாரத்துறை அமைச்சராக முஸ்லிம் பெண்மணியொருவர் நியமிக்கப்பட்டுள்ளார். ஸ்கேண்டநேவியன் நாடுகளின் (சுவீடன், நார்வே, டென்மார்க், ஐஸ்லாந்து, பின்லாந்து மற்றும் பல தீவுகளை உள்ளடக்கிய ஐரோப்பிய பிரதேசம்) வரலாற்றிலேயே முதன் முதலாக ஒரு முஸ்லிம் பெண் அமைச்சராக தேர்வுச் செய்யப்படுவது இதுவே முதன் முறையாகும்.
இதுக்குறித்து நார்வே பிரதமர் ஜென்ஸ் ஸ்டால்டன்பெர்க் செய்தியாளர்களிடம் கூறுகையில், “புதிய சக்தி, புதிய விழுமியங்கள், புதிய சிந்தனைகளை உருவாக்கும் களமாக நாங்கள் ஏற்படுத்திய இந்த மாற்றம் அமையும். இது புதுப்பித்தல் மற்றும் தொடர்ச்சியின் ஒரு கலவையாகும்.” என்று தெரிவித்தார். ஏற்கனவே கலாச்சாரத்துறை அமைச்சராக பதவி வகித்த Anniken Huitfeldt தொழிலாளர்கள் மற்றும் சமூக விவகாரத்துறைக்கு மாற்றப்பட்டுள்ளார். புதிய முஸ்லிம் பெண் அமைச்சரான ஹாதியா தாஜிக்கிற்கு 29 வயதாகிறது. இவர் பாகிஸ்தான் வம்சாவழியைச் சார்ந்தவர். இவர் லேபர் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஆவார். தாஜிக் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் 2009 வரை நீதித்துறை அமைச்சர் க்னட் ஸ்டோர்பெர்கெட்டின் அரசியல் ஆலோசகராக பணியாற்றியவர். அவ்வேளையில் பெண்கள் போலீஸ் பணியில் ஈடுபடும்பொழுது ஹிஜாப் அணிய அனுமதி வழங்க காரணமாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அமைச்சராக தேர்வுச் செய்யப்பட்டுள்ள ஹாதியா தாஜிக் கூறுகையில், “வருங்காலத்தில் கலாச்சார பன்முகத் தன்மையே தனது அமைச்சக திட்டத்தின் முதன்மையாக இடம்பெறும்” என்று தெரிவித்தார். நார்வேயில் 1,50,000 முஸ்லிம்கள் வாழ்கின்றார்கள். அந்நாட்டின் மொத்த மக்கள் தொகை 45 லட்சம் ஆகும். முஸ்லிம்களில் பெரும்பாலோர் பாகிஸ்தான், சோமாலியா, ஈராக் மற்றும் மொரோக்கோ நாடுகளின் பின்னணியைக் கொண்டவர்கள் ஆவர். நார்வேயில் 90 முஸ்லிம் அமைப்புகள் மற்றும் மையங்கள் இயங்குகின்றன.

ஞாயிறு, 23 செப்டம்பர், 2012

ஆப்கானில் பாகிஸ்தான் பத்திரிகைகளுக்கு தடை!


காபூல்:பாகிஸ்தானின் அனைத்து பத்திரிகைகளுக்கும் ஆப்கான் அரசு தடைவிதித்துள்ளது. தாலிபான் போராளிகளுக்கு ஆதரவளிப்பதாக குற்றம் சாட்டி பாகிஸ்தானில் பத்திரிகைகளை விநியோகம் செய்வதை தடுக்க ஆப்கான் அரசு தீர்மானித்துள்ளது. நாட்டின் கிழக்கு பகுதியில் இருந்து அனைத்து பாகிஸ்தான் பத்திரிகைகளையும் விநியோகிப்பதை தடுக்குமாறு ஆப்கான் உள்துறை அமைச்சகம் போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளது. தாலிபான் தலைவர்களுக்கு தங்களின் கொள்கைகளை மக்களிடம் கொண்டு சேர்க்க பாகிஸ்தான் பத்திரிகைகள் துணை போகின்றன என்று ஆப்கானிஸ்தான் உள்துறை அமைச்சகம் குற்றம் சாட்டியுள்ளது. பத்திரிகைகளுக்கு தடைவிதிப்பதன் மூலம் இரு நாடுகளுக்கு இடையேயான உறவு பாதிக்கப்படும் என கருதப்படுகிறது. எல்லையில் நடக்கும் தாக்குதல்களின் பெயரால் இரு நாடுகள் இடையே கருத்துவேறுபாடுகள் நிலவும் வேளையில் புதிய சர்ச்சைக்குரிய முடிவை ஆப்கான் அரசு எடுத்துள்ளது.

இறைத்தூதருக்கு அவமதிப்பு: மதுரையில் அனைத்து முஸ்லிம் அமைப்புகள் சார்பாக மாபெரும் ஆர்ப்பாட்டம்!


மதுரை:இறைவனின் இறுதித்தூதரான முஹம்மது நபி(ஸல்) அவர்களை இழிவுப்படுத்தும் விதமாக வெளியான அமெரிக்க திரைப்படத்தைக் கண்டித்து உலகம் முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. தமிழகத்திலும் முஸ்லிம்கள் பல்வேறு இடங்களில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். மதுரையில் நேற்று(சனிக்கிழமை) மதுரை முஸ்லிம் ஐக்கிய ஜமாத் மற்றும் அனைத்து இஸ்லாமிய இயக்க கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மதுரை வடக்கு மாசி-மேலமாசி வீதி சந்திப்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஐக்கிய ஜமாத் மாவட்ட தலைவர் நஜிமுதீன் தலைமை தாங்கினார். ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா, சோசியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியா, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம், மனிதநேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், தேசிய லீக் கட்சி உள்ளிட்ட பல்வேறு முஸ்லிம் அமைப்புகள் மற்றும் கட்சியினர் கலந்துகொண்டனர். போராட்டத்தின்போது அமெரிக்காவை எதிர்த்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. அமெரிக்க அதிபர் ஒபாமாவின் கொடும்பாவி எரிக்கப்பட்டது. அமெரிக்க கொடிகளும் எரிக்கப்பட்டன. ஒரு கொடும்பாவியை போலீசார் பறிமுதல் செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

சனி, 22 செப்டம்பர், 2012

அமெரிக்க அயோக்கியர்களையும் Youtube யும் கண்டித்து இலங்கையில் ஆர்ப்பாட்டம்


ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் சார்பாக புதன்கிழமை (19-9-2012) கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் அமெரிக்க திரைப்படத்தையும் அதை வெளியிட்டுள்ள youtube யும் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்ட பேரணி அமெரிக்க தூதுவராலயத்தை நோக்கி சென்றது.
போலிஸின் தடையை அடுத்து காலி முகத்திடல் சுற்றுவட்டத்தில் நிறுத்தப்பட்டு, அமெரிக்க தூதுவரை சந்திப்பதற்கு ஜமாத் சார்பாக 5 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டது. அமெரிக்க தூதுவரை எச்சரிக்கை செய்ததுடன் குறிப்பிட்ட வீடியோ இணையத்தில் இருந்து எடுக்கப்படாவிட்டால் கண்டிப்பாக இதற்கு எதிராக ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் கடும் நடவடிக்கை மேற்கொள்ளும் என்பதையும் அமெரிக்க தூதரிடம் தெரிவிக்கப்பட்டது, அதையடுத்து அதே இடத்தில் கண்டன உரையுடன் போராட்டம் இனிதே நிறைவுற்றது.

நெல்லை, மேலப்பாளையத்தில் போலீஸ் அராஜகம்: ஏராளமானோர் காயம்!


நெல்லை:திருநெல்வேலி மாவட்ட தலைநகரான நெல்லையில் இறைத்தூதரை இழிவுப்படுத்திய அமெரிக்க திரைப்படத்தை கண்டித்து நடந்த ரயில் முற்றுகை போராட்டத்தில் கலந்துகொண்டார் மீது போலீசார் நடத்திய தடியடி தாக்குதல்களில் ஏராளமானோர் காயமடைந்தனர். தடியடியை கண்டித்து மேலப்பாளையம் பொதுமக்கள் நடத்திய சாலை மறியல் போராட்டத்திலும் போலீசார் தடியடி நடத்தியுள்ளனர். இஸ்லாத்தின் இறுதித்தூதரான முஹம்மது நபி(ஸல்) அவர்களை அவதூறாக சித்தரித்து தயாரிக்கப்பட்ட அமெரிக்க திரைப்படத்தை கண்டித்து உலகம் முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. திருநெல்வேலி மாவட்டம் நெல்லையில் நேற்று மாலை மனிதநேய மக்கள் முன்னேற்ற கழகத்தினர் மாநில தலைவர் பாளை ரஃபீக் தலைமையில் போராட்டம் நடத்தினர். இப்போராட்டத்தில் பெண்களும் கலந்துகொண்டனர். நெல்லை சந்திப்பு ரயில் நிலையம் நோக்கி வந்த அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். எனினும் அவர்கள் தடையை மீறி ரெயில் நிலையத்துக்குள் நுழைய முயன்றனர். இதையடுத்து போலீசார் தடியடி நடத்தி விரட்டினர். நாலாபுறமும் சிதறி ஓடிய போராட்டக்காரர்கள் மோட்டார் சைக்கிள்களை தாக்கி பஸ்கள் மீது கல்வீசியதாக கூறப்படுகிறது. ஆனால், போராட்டத்தில் கலந்துகொண்ட பெண்கள் மீது போலீசார் தாக்குதலை நடத்தியதால் அவர்களை பாதுகாக்கவே போலீசாரின் கவனத்தை திசை திருப்ப வாகனங்களை தாக்கியதாக போராட்டக்காரர்கள் கூறுகின்றனர். மேலும் போராட்டக்காரர்களை வன்முறையின் பக்கம் திசை திருப்பவே போலீஸார் கண்மூடித்தனமாக தடியடி நடத்தினர் என்றும் இது திட்டமிட்ட சதி எனவும் போராட்டக்காரர்கள் கூறுகின்றனர். இச்சம்பவத்தில் பலர் காயமடைந்தனர். போராட்டக்காரர்கள் 13 பேr படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் பாளை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், போராட்டக்காரர்கள் தங்களை தாக்கியதாக பொய் கூறி போலீசார் சிலர் மருத்துவமனையில் சிகிட்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக போராட்டம் நடத்தியவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இச்சம்பவத்தில் 18 பெண்கள் உள்பட 252 பேரை போலீசார் கைதுச் செய்துள்ளனர். இந்த நிலையில் தடியடி சம்பவத்தை கண்டித்து மேலப்பாளையத்தில் நேற்று இரவு ஏராளமானோர் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த போலீசார் மீது ஆர்ப்பாட்டக்காரர்கள் கல்வீசி தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் ஒருவர் காயமடைந்தார். சாலை மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் லேசான தடியடி நடத்தி கலைத்தனர். இதுத்தொடர்பாக நெல்லை மாநகர போலீஸ் துணை கமிஷனர் மணிவண்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- போராட்டக்காரர்கள் போலீஸ் தடையை மீறி ரயில் நிலையத்தில் நுழைந்து அங்குள்ள பொருட்களை சேதப்படுத்த முயன்றனர். இதனால் கலைந்து செல்ல எவ்வளவோ கூறியும் அவர்கள் கலைந்து செல்ல மறுத்து போலீசாரை தாக்க முயன்றனர். இதனைத் தொடர்ந்து நிலைமையை கட்டுப்படுத்தவே லேசாக தடியடி நடத்தப்பட்டது. மறியலில் ஈடுபட்ட 18 பெண்கள் உள்பட 252 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளார். இதையடுத்து போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. போராட்டக்காரர்கள் கல் வீசி தாக்கியதில் 6 பஸ்கள் சேதமடைந்தன. இந்த சம்பவத்தையடுத்து மீண்டும் மேலப்பாளையத்தில் கடைகள் அடைக்கப்பட்டன. மேலப்பாளையம் வழியே செல்லும் அனைத்து பஸ்களும் நிறுத்தப்பட்டன. இதனால் வெளியூர் செல்லும் பயணிகள் கடும் அவதிப்பட்டனர். இன்று காலை 9 மணி வரை மேலப்பாளையம் வழியே வெளியூர்களுக்கு பஸ்கள் இயக்கப்படாததால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். பாபநாசம் மார்க்க பஸ்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டன. தென்காசி-நெல்லை பஸ்கள் 8 மணிக்கு பிறகே இயக்கப்பட்டன. மேலப்பாளையம் பகுதியில் பதட்டம் நிலவுவதால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பஸ்கள் மீது கல்வீசி தாக்கியது மற்றும் வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் 50 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் வயதானவர்கள், குழந்தைகள், பெண்கள் அனைவரின் மீது கண்மூடித்தனமான போலீசார் தாக்குதல் நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது. நாம் தமிழர் கட்சி, சமத்துவ மக்கள் கட்சி ஆகிய அமைப்புகள் சார்பாக நெல்லை சந்திப்பில் நடைபெற்ற ரெயில் மறியல் போராட்டத்திற்கு பாதுகாப்பு அளித்த போலீஸ், முஸ்லிம்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெறியாட்டத்தை நடத்தியுள்ளது என்று பாதிக்கப்பட்ட மக்கள் கூறுகின்றனர். அதே வேளையில் போராட்டத்தில் கலந்துகொண்டோர் கட்டுப்பாடு இல்லாமல் நடந்துகொண்டதாக கூறப்படுகிறது. போராட்டத்தை ஏற்பாடு செய்தவர்கள் இதனை கவனத்தில் கொள்ளவில்லை.

10 ஆயிரத்திற்கு மேற்பட்ட குழந்தைகள் பாதிரிகளால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர், ஆஸ்திரேலிய திருச்சபை அதிர்ச்சி தகவல்!


ஆஸ்திரேலிய நாட்டு ரோமன் கேத்தலிக் திருச்சபை ”இதுவரை 600 க்கு மேற்பட்ட குழந்தைகள் பாதிரிமார்களால் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளன என்ற அதிர்ச்சிகரமான அதே நேரத்தில் மிகவும் கிறிஸ்துவ உலகிற்கு மிகவும் கேவலமான தகவலை சமீபத்தில் வெளியிட்டுள்ளது.
ஆஸ்திரேலிய நாட்டின் விக்ட்டோரியா மாநிலத்தில் உள்ள ரோமன் கேத்தலிக் திருச்சசை மாநில பாராளுமன்ற விசாரனைக்கு குழுவிடும் இந்த அறிக்கையை சமர்பித்துள்ளது. பாதிக்கப்பட்ட குழந்தைகளின் உண்மையான எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டும் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இதில் பெருப்பாலானவைகள் 1960 முதல் 1980 வரை நடைபெற்றதாகும். மேலும் இது தொடர்பாக 45 வழக்குகளை இன்னனும் நாங்கள் விசாரித்துக் கொண்டு உள்ளோம் எனத் தெரிவித்துள்ளனர். மேலும் இது விக்டோரிய மாநிலத்தில் மட்டும் உள்ள பாதிரிமார்களால் பலாத்காரம் செய்யப்பட்ட குழுந்தைகள் பற்றிய விபரமாகும் எனக் கூறியுள்ளனர். மெல்போன் நகர Archbishop , Denis Hart இதை ”இது நமக்கு மிகவும் கேவலமான செய்தி” என சுட்டிக்காட்டியுள்ளார். ஒரு நாட்டில் ஒரு மாநிலத்தில் 10 ஆயித்திற்கு மேல் என்றால் அனைத்து நாட்டிலும் உள்ள அனைத்து மாநிலத்திலும்?

வெள்ளி, 21 செப்டம்பர், 2012

இயேசு (இறைத்தூதர் ஈஸா) திருமணமானவர்! ஹார்வர்ட் பல்கலைக்கழக பேராசிரியரின் ( இஸ்லாத்தை உண்மை படுத்தும் ) தகவல்!


நியூயார்க்: கிறிஸ்தவர்களால் இயேசு என்றும் முஸ்லிம்களால் இறைத்தூதர் ஈஸா(அலை) என்று அழைக்கப்படும் ஜீஸஸ், திருமணமானவர் என்று ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தின் இறையியல் பிரிவு தலைவரான பேராசிரியர் கேரன் கிங் கூறியுள்ளார். காப்டிக் ஸ்டடீஸின்10-வது சர்வதேச மாநாட்டில் தனது ஆய்வை வெளியிட்டார் கேரன் கிங். கிறிஸ்தவர்கள் பாரம்பரியமாக இயேசுவுக்கு திருமணமாகவில்லை என்று கூறினாலும் மிக மிகப் பழமையான கையால் எழுதப்பட்ட வாசகங்கள் அடங்கிய கோரைப் புல்லால் ஆன கையெழுத்துப் படி ஒன்று கிடைத்துள்ளது. அதில் இயேசுநாதரின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.
முழுமையான வாசகங்கள் அதில் இல்லை. பண்டைய எகிப்திய கோப்டிக் மொழியில் வாசகங்கள் உள்ளன. அதை ஆராய்ந்து பார்த்ததில், இயேசுநாதரின் மனைவிதான் அவரது முதன்மையான பெண் சிஷ்யையான மேரி மெகதலீன் என்பது தெரிய வருகிறது என்று கேரன் கிங் கூறியுள்ளார். இந்த கையெழுத்துப் படியானது 8 செமீ நீளமும், 4 செமீ அகலமும் கொண்டதாக அமைந்துள்ளது. இந்த கையெழுத்துப் படியில் உள்ள வாசகங்கள் மூலம் இயேசுநாதரும், மேரி மெகதலீனும் கணவன் மனைவி என்பது திட்டவட்டமாக தெரிய வருகிறது. ஒரு இடத்தில் மேரி மெகதலீனை எனது மனைவி என்று இயேசுநாதர் தனது சீடர்களிடம் குறிப்பிட்டதாக கூறப்பட்டுள்ளது. ஒரு இடத்தில் மேரி மெகதலீன் எனது சிஷ்யையாக இருப்பார் என்று இயேசுநாதர் கூறுகிறார். அடுத்த2 வரிகளில், நான் அவருடன் வசித்து வருகிறேன் என்று கூறியுள்ளார் இயேசுநாதர். இந்த கையெழுத்துப் படி நம்பகத்துக்குரியதாக இருக்க வேண்டும் என்றே நம்புகிறோம். அப்படி இருந்தால் இது மிகப் பெரிய ஆச்சரியகரமான தகவலாக அமையும் என்றார். ஏற்கனவே மேரி மெகதலீனும், இயேசுநாதரும் தம்பதியர் என்று அமெரிக்க எழுத்தாளர் டேன் பிரவுன் தனது தி டாவின்சி கோட் நூலில் குறிப்பிட்டிருந்தார். இது பெரும் சர்ச்சையையும், எதிர்ப்புகளையும்,புயலையும் கிளப்பியிருந்தது என்பது நினைவிருக்கலாம். இந்த நிலையில் மேரி மெகதலீன், இயேசுநாதரின் மனைவிதான் என்று அமெரிக்க ஆய்வாளர் ஒருவர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேவேளையில் இஸ்லாத்தின் இறுதி வேதமான திருக்குர்ஆன் இறைவனால் அனுப்பப்பட்ட அனைத்து இறைத்தூதர்களும் திருமணமானவர்கள் என்று குறிப்பிடுகிறது.
ஈசா நபி ( இயேசு) திருமணமானவர் தான் என்ற தகவலை சகோ. பி.ஜே. அவர்கள் தன்னுடைய திருக்குர்ஆன் தமிழாக்கதிலே கீழ்காணும் வசனத்தை அடிப்படையாக வைத்து விளக்கினார். அது இப்போது பைபிளின் அடிப்படையிலும் உணமைகி விட்டது . ஆனால் சில பரேலவி மவ்லவிகளும், ஜாக்கின் தலைவரும் விமர்சித்தனர். இது பி.ஜே. யின் சொந்தக் கருத்து என்றனர். இவர்கள் பைபிளை அடிப்படையாக வைத்து தான் இயேசுக்கு திருமணமாகவில்லை என்றனர். அது இன்று அந்த பைபிளை தூக்கி பிடிக்கும் பாதிரியராலேயே பொய் படுத்தப் பட்டுவிட்டது. முஹம்மது நபி(ஸல்) அவர்களிடம் திருக்குர்ஆனில் கீழ்க் கண்ட வசனத்தை அல்லாஹ் கூறுகிறான்: உமக்கு முன் தூதர்களை அனுப்பினோம். அவர்களுக்கு மனைவியரையும் மக்களையும் ஏற்படுத்தினோம்…’. (அல்குர்ஆன் 13:38)

கருத்து சுதந்திரத்தை அமெரிக்கா மறுபரிசீலனைச் செய்யவேண்டும் – ஹினா ரப்பானி!


இஸ்லாமாபாத்:இறைத்தூதரை அவமதிக்கும் அமெரிக்க திரைப்படத்திற்கு எதிரான போராட்டம் தொடரும் வேளையில் அந்நாட்டில் கருத்து சுதந்திரம் குறித்து அமெரிக்கா மறுபரிசீலனைச் செய்யவேண்டும் என்று பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹினா ரப்பானி கோரிக்கை விடுத்துள்ளார். சி.என்.என் தொலைக்காட்சிக்கு அளித்த நேர்முகத்தில் ஹினா ரப்பானி இவ்வாறு கூறினார்.
“இறைத்தூதரை அவமதிப்பது கருத்து சுதந்திரமா? என்பது குறித்து அமெரிக்கா ஆலோசிக்கவேண்டும். கருத்து சுதந்திரத்தின் திரைமறைவில் இத்தகைய திரைப்படங்கள் வெளியாகும் வேளையில் உலகின் பல பகுதிகளில் அமெரிக்க குடிமக்கள் தாக்கப்படும் வேளையில் அது எவ்வளவு தூரம் சுதந்திரமானது என்பது குறித்து பரிசோதிக்கப்பட வேண்டும்” என்று ஹினா ரப்பானி கூறினார். இறைத்தூதரை அவமதிக்கும் திரைப்படத்திற்கு எதிராக பாகிஸ்தானில் நடைபெறும் போராட்டங்கள் குறித்த கேள்விக்கு பதிலளிக்கையில் ஹினா ரப்பானி இவ்வாறு பதிலளித்தார்.

வியாழன், 20 செப்டம்பர், 2012

தோற்றுப் போனவர்களின் ஈன சுரம் (Innocence of Anti Muslims)


அமெரிக்கத் திரைப்படத் துறையினால் அறியப்படாதவனும் அமெரிக்கக் குடியுரிமை பெற்று, அமெரிக்காவின் உளவுத்துறையான எஃப்.பி.ஐ.யின் ஏஜெண்டாகப் பணியாற்றிக்கொண்டு கலிஃபோர்னியாவில் வாழ்ந்துவருபவனுமான சாம் பேஸிலி (Sam Bacile) (எ) நகூலா பேஸிலி நகூலா (Nakoula Basseley Nakoula) என்பவனும், அல்குர்ஆனை இழிவு படுத்துவதாக எண்ணிக் கொண்டு அதன் பிரதிகளை எரித்துச் சர்ச்சைக்குள்ளான புளோரிடாவைச் சேர்ந்த அடிமுட்டாள் டெர்ரி ஜோன்ஸ் என்பவனும் இணைந்து Innocence of Muslims என்ற படத்தைத் தயாரித்துள்ளனர். இதற்கான ட்ரெய்லர் ஒன்றினைக் கடந்த ஜூலை 2ந்தேதி யூட்யூப் தளத்தில் வெளியிட்டனர். இதனைக் கண்ணுற்றவர்கள் துவக்கத்தில் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால், அதனுடைய அரபுப் பதிப்பை எகிப்தில் பிறந்து அமெரிக்கக் குடியுரிமை பெற்று வாழும் மொரீஸ் ஸதெக் என்பவன் (இவனும் அமெரிக்க ஏஜெண்டாக இருக்கக்கூடும்) இம்மாதம் 8ஆம் தேதி யூட்யூபில் வெளியிட்டான். அது பிற சமூக வலைத் தளங்கள் மூலம் லிபியா, எகிப்து மற்றும் எமனில் காட்டுத் தீயாய்ப் பரவியது. பின்னர் மெல்ல மெல்லக் கொழுந்து விட்டெரிந்து, லிபியாவின் பென்காஸியிலுள்ள அமெரிக்கத் தூதரகம் தாக்கப்பட்டது. அமெரிக்கத் தூதரக வீரர்கள்(!) தம் தலைவரைப் புகை மூட்டத்தில் தவிக்கவிட்டுத் தங்களின் உயிர் பிழைக்க ஓடிப்போனதில் உயிருடனிருந்த அமெரிக்கத் தூதர் கிறிஸ்டோபர் ஸ்டீவன்ஸும் தூதரக அதிகாரிகள் மூவரும் மூச்சுத் திணறி இறந்து போயினர். இந்தளவு களேபரத்தை ஏற்படுத்திய அந்தப் படத்தில் நடித்துள்ள கதாபாத்திரங்களிடம்கூட, "2000 வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்து வந்த எகிப்தியர் மாஸ்டர் ஜார்ஜ் என்பவரைப் பற்றிய படம்" என்றும் படத்தின் பெயர் "பாலைவன வீரர்கள்" என்றும் பொய் சொல்லியே இப்படம் தயாரிக்கப் பட்டிருக்கிறது. இஸ்லாத்தைப் பற்றியும் முஹம்மது (ஸல்) பற்றியும் பேசப்படும் குரல்கள் அனைத்தும் Voice Over டப்பிங் முறையில் Post production இல் மாற்றி அமைக்கப்பட்டிருப்பதற்கான ஆதாரங்கள் தற்போது வெளியாகியுள்ளன. இதில் வரும் கதாபாத்திரங்களின் பெயர்கள் முஹம்மது(ஸல்) அவர்களாகவும், அன்னை கதீஜா(ரலி), அன்னை ஆயிஷா(ரலி) ஆகியோராகவும் உருவகிக்கப்பட்டு, பிற்சேர்க்கையாக இணைக்கப்பட்டுள்ளன. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்து இப்படத்தில் நடித்த சிண்டி லீ் கார்சியா மற்றும் அன்னா குர்ஜி உட்பட கதாபாத்திரங்கள் பெரும்பாலானோர், இப்படத்தை இயக்கிய சாம் பேஸிலியின்மீது பல்வேறு வழக்குகளைப் பதிவு செய்திருப்பதும் டைரக்டரின் "நேர்மை"யை வெளிப்படுத்துகின்றன. முஹம்மது (ஸல்) அவர்களின் உண்மையான வாழ்க்கை வரலாற்றுக்கு நேர்மாறான குப்பைகள் பேஸிலியின் படத்தில் குவிந்திருப்பது ஒரு பக்கம் என்றால் - ஆடியோ, வீடியோ, எடிட்டிங் - ஏன் - நடிப்பில்கூட துளியும் தரம் இல்லாமல், மிகக் குறைந்த செலவில் ஒரு அறைக்குள்ளாகவே நடிகர்களை நிறுத்தி ஒரு நீலப்படத்திற்குச் சமமாகத் தயாரிக்கப்பட்டிருக்கிறது இதன் ட்ரெய்லர். இந்த நாலாந்தரப் படத்தை எடுப்பதற்காகத் தன்னை யூதன் எனக் கூறி 5 மில்லியன் டாலரை இஸ்ரேலிய 'நண்பர்'களிடமிருந்து நன்கொடையாகப் பெற்றதாகப் பத்திரிகையாளர்களிடம் சொல்லியிருக்கிறான் அப்பனையே மாற்றிக்கொண்ட பேஸிலி. ஐந்தாண்டுகள் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட இப்படம் மூலம் சாம் பேஸிலி எதிர்பார்த்த மலிவு விளம்பரம், அதிக அளவிலான ஹிட்ஸ், முஸ்லிம்கள் வன்முறையாளர்கள் எனும் "கதை"யை மீள்கருத்துருவாக்கும் முயற்சி, அதன் மூலம் இஸ்லாத்தை நெருங்க எத்தனிப்பவர்களைத் தடுத்து, "இஸ்லாமோஃபோபியா"வை ஊட்டுவது எனப் பல எதிர்பார்ப்புகள் நிறைவேறி சாம் பேஸிலி குழுவினரை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியிருக்கிறது. முஸ்லிம்கள் உணர்ச்சி வசப்படக்கூடியவர்கள். அதிலும், தங்களின் தலைவர் நபி(ஸல்) அவர்களைக் கொச்சைப்படுத்துவதைச் சகித்துக் கொள்ளாமல் பொங்கிவிடுவர் என்பதே இந்த சாம் மற்றும் பாதிரியார் டெர்ரி கூட்டணியின் கணிப்பு. அந்தக் கணிப்பைப் பொய்யாக்கிட முஸ்லிம்கள் முன்வரவில்லை. ஆஃப்கானிஸ்தான், பங்களாதேஷ், எகிப்து, இந்தியா, இந்தோனேஷியா, லெபனான், லிபியா, மொராக்கோ, இந்தியா, இராக், ஈரான், சூடான், கத்தர், பாகிஸ்தான், துருக்கி, எமென் ஆகிய முஸ்லிம்கள் கணிசமாக வாழக்கூடிய நாடுகளில் மட்டுமின்றி மேற்கத்திய நாடுகளிலும் முஸ்லிம்களின் எதிர்ப்புக்குரல் ஓங்கி ஒலித்துள்ளது. இந்தக் கழிசடைப் படத்தை எடுத்த கயவன் சாம் பேஸில் நகூலா என்பவனின் போலிப் பெயர்கள்: Sam Bacile, Mark Basseley Youssef, Yousseff M. Basseley, Nicola Bacily, Robert Bacily, Erwin Salameh, Thomas J. Tanas, Matthew Nekola, Ahmad Hamdy, Amal Nada, Daniel K. Caresman, Sobhi Bushra, Kritbag Difrat, PJ Tobacco, Malid Ahlaw ஆகியன. லட்சக்கணக்கான டாலரில் வங்கி மோசடிகள், வரி மோசடிகள், ச்செக் மோசடிகள், ஆபாச சினிமா படமெடுத்தல், போதைப் பொருள் தயாரிப்பு, பெயர்/ஆள் மாறாட்டம் போன்ற பல்வேறு குற்றப் பின்னணிகள் கொண்டவன்தான் பேஸிலி. இவன் செய்த அடுக்கடுக்கான குற்றங்களுக்காக இவனுக்கு நீதிமன்றம் விதித்த தண்டனை திடீரென்று தளர்த்தப்பட்டது. சிறிது காலம் சென்றவுடன் விடுதலை செய்யப்பட்டான் பேஸிலி. காரணத்தை அவனே சொல்கிறான் : Nakoula stated, “I decided to cooperate with the government to retrieve some of these mistakes or damage happened ..." எதிர்பார்த்தபடி உலக முஸ்லிம்களின் எதிர்ப்புக்குரலைக் கேட்டவுடன் இந்தக் கயவனை ஒளித்து வைத்துக்கொண்டு, அவனுடைய குடும்பத்தாரைத் தகுந்த பாதுகாப்புடன் அவனிடம் கொண்டுபோய்ச் சேர்த்துவிட்டு, "பேஸிலி எங்கிருக்கிறான் என்று சொல்லமுடியாது" என்று உலக போலீஸ் அமெரிக்கா திமிராகப் பேசுகிறது. அதற்கு, "பரவாயில்லை, நாங்கள் கண்டுபிடிப்போம்" என்று ஈரான் பதிலடி கொடுத்துள்ளது. இதற்குப் பிறகும் ஒருவர் கொந்தளிக்கவில்லை எனில் அவர் முஸ்லிமே இல்லை. ஆனால், இஸ்லாம் துளியும் காட்டித் தராத வன்முறையில் இறங்கி, பொதுச்சொத்துகளை, உடமைகளை, உயிர்களைச் சேதப்படுத்துவதும், மறியல், ஆர்ப்பாட்டம், பேரணியில் செருப்பால் அடிப்பது, கொடியை எரிப்பது, சாணியைக் கரைப்பது, விளக்குமாறில் வீரம் காட்டுவது, கொடும்பாவியைக் கொளுத்துவது போன்ற இஸ்லாம் காட்டித் தராத பண்பற்ற அரசியலுக்கு மட்டுமே உதவும் அநாகரிகச் செயல்களில் ஈடுபடுவது முஸ்லிம்களுக்கு அழகல்ல. ஒரு தவறுக்கு இன்னொரு தவறு சரியாகி விடாது என்பதை முஸ்லிம்கள் ஒவ்வொருவரும் நினைவில் நிறுத்த வேண்டும். நம் உணர்ச்சிகளைக் காட்டவேண்டும்; ஆனால், அது நமக்கு இடர் தராத மக்களுக்கு இடைஞ்சலாகக் கூடாது. முஸ்லிம்களின் அறிவார்ந்த எதிர்வினை எவ்வாறு இருக்க வேண்டும்? இந்தக் கழிசடைப் படத்தின் மூலம் பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள், தான் எப்படிப் பாதிப்பட்டுள்ளோம் என்பதைப் பிற மதச் சகோதரர்களுக்கும், மதத்தை ஏற்காத நல்ல மனிதர்களுக்கும் உணர்த்தியாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். ஒரு முஸ்லிம், தன்னையோ தன் பெற்றோரையோ, தன் குடும்பத்தினரையோ பிறர் எள்ளி நகையாடுவதையும் இழிவுபடுத்துவதையுங்கூட சகித்துக் கொள்வான். ஆனால், தன் தலைவர் முஹம்மது (ஸல்) அவர்கள் ஏளனம் செய்யப்படுவதைப் பொறுத்துக் கொள்ளமாட்டான். ஏனெனில் அவர் இவனுடைய உயிரினும் மேலானவர் என்பதை அவர் காட்டித் தந்த வழிமுறையோடு எதிர்வினையாற்ற வேண்டும். திட்டமிட்ட எதிர்வினை, இனியொரு முறை எதிரிகள் விஷமம் செய்ய எத்தனிக்கையில், ஒரு கோடி முறை யோசிக்க வைக்கும். பிற மதத்தவர்களிடம், முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு வீரியமுடன் ஒவ்வொரு முஸ்லிமும் இஸ்லாத்தை அதன் சரியான வடிவில் எடுத்துச் சொல்ல வேண்டும். "நான் முஸ்லிம்" என்று வாயால் மட்டும் சொல்லாமல் "நான் முஸ்லிம்" என்பாதை வாழ்வால் காட்டுவதற்கு நாம் முன்வரவேண்டும். இது ஏதோ ஆடியோ, வீடியோ, டிவிடி, புத்தகங்கள், இணைய தளங்கள் என்பதோடு நிறுத்திக் கொள்ளாமல் நபி(ஸல்) அவர்களை நேசிக்கும் ஒவ்வொரு முஸ்லிமும், நபியவர்கள் போதித்த நெறியைத் தமது வாழ்க்கையாகவே ஆக்கிக் கொள்ளல் வேண்டும். ஒரு முஸ்லிமின் சொல், செயல் அனைத்திலும் ஒரு நறுமணம் போல சுகந்தமாய் இஸ்லாம் வெளிப்படுமாறு "தஃவா" வெளிப்படல் வேண்டும். நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கையைப் பிரதிபலித்த மெசேஜ் போன்ற சிறந்த திரைப்படங்கள் தயாரிக்கப்படல் வேண்டும். இதற்கு வணிக நிறுவனங்கள், முஸ்லிம்களில் பெரும் பணக்காரர்கள் முன் வரவேண்டும். நபிமார்கள், சத்திய சஹாபாக்கள் ஆகியோரின் தியாக வரலாறுகள் பரவலாக்கப்பட வேண்டும். ஆங்கிலம் அறிந்த அத்தனை குழுமங்களுக்கும், நண்பர்களுக்கும், உற்றார் உறவினர், அனைவருக்கும் அனுப்பி இதன் உண்மை நிலையை அறியச் செய்யலாம். அதன் மூலம் அவர்களும் இத்தகைய விஷம வீடியோக்களைத் தடை செய்ய உதவக்கூடும். "தீமையிலும் நன்மையுண்டு" எனும் முதுமொழிக்கேற்ப தம் எதிர்ப்புக் குரலைக் காட்டுவதற்காக தமிழக இஸ்லாமிய இயக்கங்கள் ஒற்றுமையுடன் ஒன்று திரண்டதையும் கண்டோம். இராக்கில் காட்டப்பட்ட எதிர்ப்பில் ஸன்னிகளும் ஷியாக்களும் ஒன்றாய்க் கலந்ததையும் கண்டோம். புண்பட்ட முஸ்லிம்களின் உள்ளங்கள் ஆற, வன்முறைச் செயல்களை அறவே தவிர்த்து, மற்ற நாடுகள்/மாநிலங்களுக்கு முன்மாதிரியாக - ஆக்கப்பூர்வமான செயல்களில் ஈடுபட வேண்டிய பொறுப்பு தமிழக முஸ்லிம்களுக்கு உள்ளது. பொய், மோசடி, பித்தலாட்டம் கலந்து எந்த அளவிற்கு இஸ்லாத்திற்கு தீங்கிழைக்க எதிரிகள் எண்ணுகிறார்களோ அதைவிட மேலாக இறைவன் இஸ்லாத்தைப் பிற மதத்தவர் அறியும் வண்ணம் செய்கிறான். இந்தக் கழிசடைப் படத்துக்குப் பதிலடி தரும் வண்ணம் நபி(ஸல்) அவர்களின் உண்மையான வாழ்க்கை வரலாற்றைத் திரைப்படமாக எடுத்துக் கொண்டிருப்பவர்கள் விரைந்து அதை வெளியிட முயலவேண்டும். ஏனெனில், அதற்குள் சிண்டி லீயும் அன்னா குர்ஜியும் இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டுவிடக்கூடும். பாவம், இறைவனின் ஒளியைத் தம் வாயால் ஊதி அணைத்துவிடுவதற்குப் பகல் கனவு கண்டு தோற்றுப்போன இன்னொரு Innocence of Anti Muslims!

முஸ்லிம்களை விமர்சிக்கும் அட்டைப்பட கட்டுரை: நியூஸ் வீக் பத்திரிகையின் திமிர்!


நியூயார்க்:இறைவனின் இறுதித்தூதரான முஹம்மது நபி(ஸல்) அவர்களை இழிவுப்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்ட திரைப்படத்தின் காட்சிகள் யூ ட்யூப் இணையதளத்தில் வெளியானதை தொடர்ந்து முஸ்லிம் உலகில் உருவான பெரும் கொந்தளிப்பு அடங்கு முன்னரே அமெரிக்காவில் இருந்து மீண்டும் ஒரு சர்ச்சை நியூஸ் வீக் பத்திரிகை மூலம் வெளியாகியுள்ளது.
‘Muslim Rage’ என்ற தலைப்பில் அட்டைப்பட கட்டுரையை வெளியிட்டுள்ள நியூஸ் வீக் எரிகிற நெருப்பில் எண்ணையை ஊற்றும் செயலை புரிந்துள்ளது. இக்கட்டுரை வாசகர்களையும், அரசியல் நோக்கர்களையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
முன்பு இறைத்தூதரையும், முஸ்லிம்களையும் விமர்சித்து முஸ்லிம்களின் கண்டனத்திற்கு ஆளான அயான் ஹிர்ஸி அலி என்ற சோமாலியா நாட்டு வலதுசாரி ஆதரவு எழுத்தாளர் பெண் தான் இந்த கட்டுரையை எழுதியுள்ளார். ஹிர்ஸி அலி. சோமாலியாவின் ஒரு முஸ்லிம் குடும்பத்தைச் சேர்ந்த இவர் 1992-ல் நெதர்லாந்தில் தஞ்சம் புகுந்தார். இஸ்லாத்தை தாக்கி இவர் எழுதியும் பேசியும் வந்ததால் மிக விரைவில் இவர் புகழ் அடைந்தார். பாராளுமன்ற உறுப்பினராகவும் ஆனார். இவர் எழுதிய ஒரு கதையை( the submission) படமாக எடுத்த இயக்குனர் தியோ வான்கோ ஆம்ஸ்டர்டாமில் கொல்லப்பட்டார். இதனால் ஹிர்ஸி அலியின் ‘புகழ்’ மேலும் உலகெங்கும் பரவியது.

நபிகள் நாயகத்தின் நிர்வாண கார்ட்டூனை வெளியிட்டுள்ள ஃபிரன்ச் பத்திரிக்கை!, தூதரகங்களை மூட ஃபிரன்ச் அரசு உத்தரவு


Charlie Hebdo என்ற ஃபிரன்ச் பத்தரிக்கை நேற்று (19-9-2012) நபிகள் நாயகத்தின் நிர்வாண கார்ட்டூனை தனது பத்திரிக்கையில் வெளியிடுள்ளது. நபிகள் நாயகத்தை வீல் சேரில் தள்ளிக் கொண்டு செல்வது போன்று அட்டைப்படத்தையும் வெளியிடுள்ளது. ஃபிரன்ச் அரசாங்கம் இதை வெளியிட வேண்டாம் என கெஞ்சியம் (ஒபாமா போன்றே..) அதெல்லாம் நிறுத்த முடியாது எனக் கூறி நபிகள் நாயகத்தின் நிர்வாண கார்டூன் படத்தை தனது பத்திரிக்கையில் வெளியிட்டுள்ளது. இதை தொடர்ந்து ஃப்ரன்ச் அரசாங்கம் தற்காப்பு நடவடிக்கையாக நாடெங்கிலும் உள்ள ஃப்ரன்ச் தூதரகங்களுக்கும் பள்ளிகளுக்கும் வெள்ளிக்கிழமை விடுமுறை அளிக்குமாறு உத்தரவிட்டுள்ளது. சென்ற ஆண்டு இதே பத்திரிக்கை நபிகள் நாயகத்தின் படத்தை வெளியிட போகின்றேன் என அறிவித்ததற்கு அந்த பத்தரிக்கை அலுவலகம் மீது வெடிகுண்டுகள் வீசப்பட்டது. தற்போது அது போன்று எதுவும் அசம்பாவிதம் நிகழ்ந்து விடாமல் இருக்க ஃப்ரன்ச் அரசாங்கம் இந்த பத்திரிக்கைக்கு பாதுகாப்பு அளித்து வருகின்றது.
இந்த பத்திரிக்கையின் ஆசரியரிடம் இது குறித்து கேட்கும் போது, ”நாங்கள் கவலைப்பட வில்லை. எதாவது நடந்தால் அதற்கு நாங்கள் பொறுப்பு அல்ல. இது பத்திரிக்கை சுதந்திரம். நான் ஒன்னும் முஸ்லிம்களை எங்க பத்திரிக்கைய வாங்கி படிங்கன்னு சொல்லலயே? பள்ளிவாசல்களில் நிகழ்த்தப்படும் உரை எனக்கு பிடிக்காது அதனால் நான் பள்ளிவாசலுக்கு போக மாட்டேன். அது போல் பிடிக்கவில்லை எனில் வாங்காதீங்க என திமீறாக பதில் அளித்துள்ளான். ஃபிரன்ச் முஸ்லிம்கள் மிகுந்த கொந்தளிப்பில் உள்ளனர். மேற்கத்திய நாடுகள் உயிரினும் மேலான முஹம்மது அவர்களை கேலிப் பொருளாக்கி வருகின்றனர். கார்ட்டூனை வெளியிட்டதும் ஃபிரன்ச் பத்தரிக்கையின் இணையதளம் பல மணி நேரம் hack செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடதக்கது.

திரைப்படம் தயாரித்தவன் மீதும் Youtube மீதும் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்த நடிகை Lee Garcia


நபிகள் நாயகத்தை கொச்சைபடுத்தி எடுக்கப்பட்ட திரைப்படத்தில் நடித்த Lee Garcia என்ற நடிகை ” படத்தின் தயாரிப்பாளர் மற்றும் Youtube மீது நேற்று (19-9-2012) லாஸ் ஏன்ஜல்ஸ் Superior கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அதில், படத்தின் தயாரிப்பாளர் Nakoula Basseley Nakoula மீது மோசடி மற்றும் அவதூறு புகார்களை தெரிவித்துள்ளார். மேலும் தனக்கு கொலை மிரட்டல்கள் வர காரணமாக உள்ள அந்த வீடியோவை Youtube முழுவதுமாக நீக்க கோர்ட் உத்தரவிட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார். இந்த வீடியோவின் காரணமாக தனது வேலை போய் விட்டதாகவும், தனது பேரக் குழந்தைகளை பாராமறிக்க அனுமதி மருக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மனுவில் தெரிவித்துள்ளார். நபிகள் நாயகத்தை கொச்சைபடுத்தி எடுக்கப்பட்ட திரைப்படும் குறித்து அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்டுள்ள முதல் வழக்கு இது என்பது குறிப்பிடதக்கது.

தவறு தவறு தினமணியின் தலையங்கம் தவறு :


கருத்து சுதந்திரம் என்றால் நான் கூறிய கருத்தை ஆதரங்களுடன் விமர்சிக்க வேண்டும். நான் சொல்லாத ஒரு விசயத்தையோ , நான் செய்யாத ஒரு செயலையோ சொன்னதாக ,செய்ததாக அவதூறு சொல்வது கருத்து சுதந்திரம் அல்ல. இன்றைய தலைவர்களின் மனைவியை பற்றியோ , அல்லது தலைவர்களின் பெயரில் அவரை போல வேடமிட்டு ஆபாச படம் எடுத்தால் ஒத்துகொள்வார்களா ? சாதாரண அரசியல் தலைவர்களை , சினிமாகாரர்களை பற்றி இல்லாததை சொன்னாலே அவர்களுடைய தொண்டர்களால் தாங்க முடியவில்லை. அப்படிஎன்றால் முஸ்லிம்கள் தங்கள் வழிகாட்டியாக மதிக்க கூடிய , மனிதர்களிலே முதல் இடத்தில் வைத்து போற்ற கூடிய ஒரு இறைதூதரை குறை கூறினால் அவர்களால் தாங்க முடியுமா ? என்று மற்ற மத சகோதரர்கள் சிந்திக்க வேண்டும். தினமணியின் துணிச்சல் என்று கருத்து சொல்பவர்கள் தங்கள் தாயாரை கெட்ட வார்த்தையால் திட்டினால் ஏற்று கொள்வார்களா ? முஸ்லிம்கள் நபியை தங்கள் குழந்தைகள், பெற்றோர்கள், ஏன் தங்கள் உயிரை விட மேலாக மதிக்கிறார்கள் இந்த விஷயம் இத்தனை வருட காலம் பத்திரிக்கை நடத்துபவர்கள் கண்டிப்பாக தெரிந்திருக்கவேண்டும். அடுத்ததாக இஸ்லாமோ முஸ்லிம்களோ அறிவிப்பூர்வமான விவாதத்திற்கோ, விமர்சனத்திற்கோ ஒரு காலமும் அஞ்சுவதில்லை. குரானிலுள்ளதை விமர்சியுங்கள், நபியின் சொற்களில் செயல்களில் வரலாற்றிலிருந்து எடுத்துக்காட்டி விமர்சியுங்கள். முஸ்லிம்கள் பதில் தர தயாராக இருக்கிறோம். எல்லாவற்றிற்கும் பதில் உள்ள மார்க்கம் இஸ்லாம் (மவ்லவி பி.ஜே. , ஜாகிர் நாய்க் போன்றவர்கள் எந்த கேள்விக்கும் ,பதில் தர தயாராக இருக்கிறார்கள், எந்த விவாதத்தையும் சந்திக்க தயாராக இருக்கிறார்கள்) ஆனால் இந்த மாதிரி இல்லாததை சொல்வது பெட்டை தனம் . தினமணி துணிச்சலாக சொல்கிறது என்பவர்கள் அவர்களுடைய இந்து மத புராணங்களில் உள்ள ஆபாச கருத்துகளை பற்றியோ, பைபிளில் உன்னதப் பாட்டு அதிகாரத்தில் உள்ள ஆபாசங்களை பற்றியோ இருப்பதை கூறி ( அவதூறாக இல்லாததை கூற தேவையில்லை ) விமர்சிக்க , விவாதம் செய்ய திராணி உண்டா ? என்று கேட்க ஆசைப்படுகிறேன். ஒரே மொழி பேசுகிறார்கள் என்பதற்காக இலங்கையில் உள்ள தமிழர்களை ( முஸ்லிம் தமிழர்களெல்லாம் இவர்களுக்கு தமிழர்கள் அல்ல , இந்துக்கள் மட்டுமே தமிழர்கள் ) தங்கள் உடன்பிறப்புகளாக சித்தரித்து இங்குள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் ஆர்ப்பாட்டம் செய்கின்றனவே அதனை எதோ உரிமை தியாகப் போராட்டம் போல இங்குள்ள மீடியாக்களும் சித்தரிக்கின்றணவே , கூடங்குளத்தில் மின்சாரம் உற்பத்தியானால் அனைத்து தமிழ் நாட்டவர்க்கும் நன்மை என்று பாராமல் போராடுபவர்களை விடுதலை போராளிகள் போல் சித்தரிகின்றனவே இதுவெல்லாம் அரசியலாக தெரிய வில்லை. முஸ்லிம்கள் விஷயம் என்றால் மீடியாக்களுக்கு அறிவு ஞானம் அதிகம் வந்து விடுவது இயல்பாக உள்ளது அதுபோல் தினமணி ஒரு நகைக்கத்தக்க கருத்தி கூறி உள்ளது . சாருக்கான், அப்துல் கலாம் ஆகியோர் அமெரிக்காவில் அவமானப் படுத்தப்பட்ட பொது முஸ்லிம்கள் போராடவில்லை என்று வருத்தப் பட்டுள்ளது . முஸ்லிம் என்றால் பிராமண சமுதாயம், மற்ற சமுதாயங்களை போல் பிறப்பால் வருவது இல்லை . சாருக்கான், அப்துல் கலாம் ஆகியோர் இஸ்லாம் கூறும் முறையில் முதலில் வாழ்க்கையை அமைத்து கொள்ளவில்லை என்பதற்கு அவர்களுடைய செயல்பாடுகளே சாட்சி. அதனால் தான் பா.ஜ.க. போன்ற முஸ்லிம்களை வெறுக்கும் கட்சிகள் அப்துல் கலாம் என்ற பெயர் தாங்கி முஸ்லிமை குடியரசு தலைவராக அங்கீகரித்தன . எந்த முஸ்லிம் அமைப்பும் அவரை ஆதரிக்கவில்லை. அதுமட்டுமல்ல முஸ்லிம்களை பொறுத்தவரை வேட்பாளர் முஸ்லிமா ? என்று பார்ப்பதில்லை , நல்லவரா தீயவரா என்றுதான் பார்ப்பார்கள். அரசியலில் மதவெறியை காட்டமாட்டார்கள் என்பதற்கு இது ஒரு உதாரணம். அது மட்டுமல்ல அப்துல் கலாம் முறையான முஸ்லிமாக இருந்தால் இன்று அவரை புகழ்பவர் யாரும் அவரை புகழமாட்டார்கள் என்பது வேறு விஷயம். அதே மாதிரி சாருக்கானும் இஸ்லாத்தில் தடுக்கப்பட்ட பல மோசமான செயல்களை செய்து கொண்டிருப்பவர். இவர்களை எல்லாம் முஸ்லிம் ரோல் மடலாக தினமணி சித்தரித்திருப்பது கேலிக்குரியது. அப்படியே அவர்கள் சிறந்த முஸ்லிமாக இருந்தாலும் முகம்மத் நபியின் தகுதிக்கு கடுகளவும் தகுதியானவர்கள் அல்ல. இறைவனின் தூதராக மதிக்க கூடிய ஒருவரை இந்த அற்பமானவர்களுடன் ஒப்பிட்டிருப்பது மிகவும் கண்டனத்துக்குரியது. மேலும் முஸ்லிம்கள் இந்தியாவில் போராடி என்ன பயன் என்று ஒரு அறிவுப்பூரவமான ? கேள்வியை எழுப்பியுள்ளது தினமணி. போராடியதால தான் இந்தியாவின் கூகுளில் அந்த படம் தடைசெய்யப் பட்டது. இதையும் தாண்டி இந்திய முஸ்லிம்கள் எதிர்பார்ப்பது அமெரிக்க அரசிடம் இந்தியா தன்னுடைய கண்டனத்தை பதிவு செய்ய வேண்டும் என்பது. ஒரு இந்து கடவுளின் பெயரையோ உருவத்தையோ பிற நாடுகள் தவறாக பயன்படுத்தி விட்டால் இந்திய பாராளுமன்றத்திலேயே கண்டனம் தெரிவிக்கப் படுகிறது. சீக்கியர்களுக்கு அமெரிக்காவில் ஒரு பிரச்சினை என்றால் இந்தியா இங்கிருந்து எகிறுகிறது. முஸ்லிம்கள் விஷயம் என்றால் கண்டும் காணாமல் இருப்பது ஏன், ? என்பதே இந்தியாவில் உள்ள கோடானு கோடி முஸ்லிம்களின் கேள்வி ? அபுல் ஹசன் - தக்கலை. http://www.dinamani.com/edition/story.aspx?&SEO&Title&SectionName=Editorial&artid=663927&SectionID=132&MainSectionID=132

செவ்வாய், 18 செப்டம்பர், 2012

நபிகள் நாயகத்தை இழிவுபடுத்திய அயோக்கியர்களை கண்டித்து குமரியில் ஆர்ப்பாட்டம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குமரி மாவட்டம் சார்பாக 17.9.2012 அன்று திங்கள் கிழமை மாலை 5 மணிக்கு மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகம் முன்பு மாமனிதர் முகமத் நபி (ஸல்) அவர்களை விமர்சித்து திரைப்படம் எடுத்த அமெரிக்க அயோக்கிய கூத்தாடிகளுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு தங்களின் கண்டனைங்களை பதிவு செய்தனர். கண்டன உரையில் மாநில மேலாண்மை குழு உறுப்பினர் ஹாஜா நுகு அவர்கள் கடுமையான முறையில் பாதிரி மார்களையும் பைபிளே ஆபாசத்தையும் கூறி அசிங்கத்தை போதிக்கின்ற வேளையில் அப்பன் பெயர் தெரியாதவன் நீ எங்கள் உத்தம தலைவரை விமர்சிக்க அருகதை அற்றவன். கண்ணியமிக்க குரானை மக்களுக்கு போதித்து உலகுக்கு ஒழுக்கத்தை கற்றுகொடுத்து வாழ்ந்து காட்டியவர் எங்கள் மாமனிதர் நபிகள் நாயகம் ஸல் என்று கூறி கடுமையா முறையில் கண்டனகளை பதிவு செய்தார்.

திங்கள், 17 செப்டம்பர், 2012

அக்னி கக்கும் அண்ணனின் ( பி.ஜே.) எழுச்சி உரை - அழியப்போகுது அமேரிக்கா :


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைவர் பீ . ஜைனுல்ஆபிதீன் அவர்கள் அயோக்கிய அமெரிக்காவை கண்டித்து ஆற்றிய கண்டன உரை நபிகள் நாயகத்தை வைத்து படம் தயாரித்து அதை YOU TUBE இல் வெளி இட்டு உள்ளார்கள் .. யாரை பற்றி வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் படம் எடுக்கலாம் ... போப் ஆண்டவர் பகிரங்க மன்னிப்பு கேட்டார் எங்களுடைய திருசபைகளில் சின்ன பசங்களுடன் ஹோமோ செக்ஸ் செய்து ஈடுபட்ட பாத்ரிகளுக்காக நான் மன்னிப்பு கேக்கிறோம் என்றானே ?அதற்க்காக அந்த உண்மை கதையை படம் எடுக்கலாமா ?ஒபாமா பொண்டாட்டியை வைத்து படம் எடுக்கலாமா ? போப் ஆண்டவர் அம்மாவை பற்றி படம் எடுக்கலாமா /படம் எடுப்பது என்றால் எதை வேண்டும் என்றாலும் எப்படி வேண்டுமானாலும் எடுக்கலாம் . அந்த வாசலை இப்போது நீங்கள் திறந்து விட்டுலீர்கள் .எண்கள் மார்க்கத்திலே அவர்கள் வரம்பு மீறினால் அதே அளவிற்கு நீயும் வரம்பு மீறு என்று அல்லா எங்களுக்கு அனுமதி அளித்துள்ளான் . அந்த அனுமதியை பாதிரிகளின் லீலைகள் பற்றியும் ஏசுநாதரின் உண்மை நிலை பற்றியும் ஆபாசாமாக பைபளில் நீங்கள் எழுதி வைத்துள்ள அந்த சம்பவங்களையும் பற்றி உங்களின் உன்னத பாட்டுகளை பற்றியும் உங்கள் பழைய ஏற்ப்பாடு காம கொடுருங்களையும் பற்றி நிஜ கதை எடுத்தல் எப்படி இருக்கும் . அதை எடுப்பதற்கு நீங்கள் எங்களை தூண்டி உள்ளீர்கள் ...ஒரு விஷயத்தை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் .நபிகள் நாயகம் அவர்கள் ஓரினை சேர்க்கையாளராக இருந்து அல்லது பல பெண்களுடன் சல்லாபம் செய்யக்கூடியவராக இருந்தால் பெண்கள் பல ஆண்களுடன் சல்லாபம் செய்ய கூடியவர்களாக இருந்தால் எண்கள் சமுதாயத்தில் அதுபோல செயல்கள் மலிந்து கிடக்கும் ..ஒரு சம்பவத்தை கூட உன்னால் காட்ட முடியுமா ?ஆனால் உன் சமுதாயத்தின் நிலை என்ன ? ஆணுக்கு ஆண் பெண்ணுக்கு பெண் கல்யாணம் பண்ணி வைக்கிறான் போப் ...மானம் கெட்ட நாய்களே ,,,இந்த சிந்தனையை தந்து உன் பைபிள் .எங்கள்வேதம் கற்பையும் கட்டுப்பாட்டையும் கற்று தந்து இருக்கு .படம் எடுப்பது என்றால் உன்னை பற்றி எடுக்கலாம் . இன்னும் சொல்லுவதென்றால் செப் 11 அன்று லிபியா தூதரகம் தாக்கபடுகின்றது...அன்றைய தினத்திலே அமெரிக்காவில் ஒரு அசிங்கம் நிறைவேறி இருக்கு ,,அது என்ன ஒரு நிறுவனம் DNA TEST செய்வதற்கு நடமாடும் வாகனம் ஒன்றை ரெடி பண்ணி உங்க அப்பன் யாரு என்று சோதித்து தருவோம் என்கிறான் .அப்போ ஒரு பயலும் அப்பனுக்கு பொறக்கல... உன்னுடைய பைபிள் கலாசாரம் உன் கள்ள பாத்ரிகள் கலாச்சாரம் எதை காட்டுது ?உன் அப்பன் யார் என்று சொல்ல வேண்டுமா ?ரத்தத்தை சாம்பிள் எடுத்து நீ எவனுக்கு பிறந்தவன் என்பதை சொல்லுவோம் என்கிறான் இந்த வாகனம் அமெரிக்க முழுவதும் வளம் வருது ..உலகமே வெறுக்க கூடிய ஒரு செயலை செய்ய கூடிய நீ படம் எடுக்கிறாயா ? சவுதி இல் ஆணுக்கு ஆணும் பெண்ணுக்கு பெண்ணும் கல்யாணம் உண்டா ? நிர்வாணா ஆட்டம் உண்டா ? அவன் பொண்டாட்டியை இவனும் இவன் பொண்டாட்டியை அவனும் மாற்றும் கலாச்சாரம் உண்டா ? இதை எல்லாம் மதம் என்ற பெயரில் நீ சொல்கிறாய் ... உன் மதத்தில் இதுபோல இருக்கு .இதுபோல சேட்டைகள் செய்தவர்கள் தான் தீர்க்க தரிசிகள் ..அதை பார்த்து நாரி போய் கிடக்கு ...பாதிர்கள் எல்லாம் பாலியல் செட்டையில் ஊறி போய் கிடக்கிறான் ,பெண்களுக்கு விடுதி நடத்துகிறோம் என்று சேட்டை ,சிறுமிகள் சீரழித்தல் ,தொண்டு நிறுவனம் என்ற பெயரில் ஹோமோ செக்ஸ் ,இதனை காரியங்களையும் கற்று கொடுத்தது உன் வேதம் ... உங்கள் மதம் ,உங்கள் பாதிரிகள் ,இந்த படத்தை எடுத்த நாயி கலாச்சாரமே அதுவாக இருக்கும் போது,,,விபசாரம் செய்தால் மரண தண்டனை ,,போதை அடிப்பவனுக்கு தண்டனை அளிக்க கூடிய மார்க்கத்தில் எங்கள் இறை தூதரை களங்கம் சுமதுவாஎன்றால் நாங்கள் பொருது கொண்டு இருக்க மாட்டோம் .என்பதை காட்ட இந்த முற்றுகை ... நபிகள் நாயகம் தான் உலகத்தின் முதல் தீவிரவாதியாம் ...அட நாயே யாரடா தீவிர வாதி ... இத்தாலி ரோமாபுரி உன்னுடைய தலைமையிலே உலகம் முழுவதும் கிருத்துவ சாம்ராஜ்யத்தை அமைக்கணும் என்று சொல்லி அரபு நாடுகள் எல்லாவற்றையும் அன்றைக்கு ஆக்கிரமிப்பு செய்த போது அதற்க்கு சாவு மணி அடித்தவர் நபிகள் நாயகம் ... உன்னை அரபு தீபகற்பகத்தில் இருந்து விரட்டி அடித்த ஆத்திரம் உன் ரத்தத்தில் ஊறி போய் கிடக்கு ...எங்களை பயங்கரவாதி என்கிறாயா ? இந்தியாவை இலங்கையை மலேசியாவை ஆக்கிரமித்து இருந்தாயே பிரிடிஸ் காரன் அவன் யார் ?எல்லாம் கிருத்துவ தீவிரவாதிகள் ... உலகத்தின் சரிபாதி சாம்ராஜ்யத்தை படை எடுத்து போய் அந்நிய நாடுகளை தாக்கி மக்களை கொன்று குவித்து ஆட்சியை பிடித்த உலக மக பயங்கரவாதி ,இந்த பைப்லை நம்பகூடிய கள்ள பாத்ரிகளை நம்பகூடிய கூட்டம் ...இப்போ அமெரிக்க வடிவில் உலகின் பல நாடுகள் மீதும் ரசாயன குண்டுகளை போட்டு மக்களை கொன்று குவிக்கும் பயங்கரவாதி நீ நபியை பற்றி சொல்கிறாயா ? போரில் பெண்களை குழந்தைகளை மதகுருமார்களை தாக்காதே என்று இலக்கணம் வகுத்த நபியை தீவிரவாதி என்கிறாயே ? உலக மகா தீவிரவாதி ரௌடி ,கையில் அணு ஆயுதம் இருப்பதால் அணு திமிரில் ஆட்டம் போடுகிறாய் .. இந்த ஆட்டம் முடிவு கட்டும் நேரம் விரிவில் வரும் இன்ஷா அல்லா .. இன்னொன்றை சொல்லி கொள்கிறோம் இந்த தூதரகத்தை உள்ளே நுழைவது பெரிய விஷயம் இல்லை .. ஆனால் இதை காவல் காப்பது எங்கள் நாட்டு காவல் துறை .. அதனால் அது பாது காப்பை இருக்கு ,,,உன்னுடைய அமெரிக்க நாய்களை இங்கே காவல் காதால் திரண்டு சென்று அந்த நாய்களை கொன்று குவிப்போம் ... எங்க நாட்டு காவல் துறை பாதுகாக்கிற காரணத்தினால் உன்னுடைய தூதரகம் பாதுகாப்பை இருக்கு . உன்னுடைய அமெரிக்க நாய்களை கொண்டு இறக்கு ,அந்த தூதரகத்தை நாங்க கையில் எடுக்கிறோம் என்று சொல்லிப்பார் .. அப்போ நீயா ?நாங்களா என்ற யுத்தத்தில் ஜெயப்பது நாங்கள் தான் உயிரை பணயம் வைத்து போராடும் கூட்டம் இது ... நீ வடி கட்டிய கோழை.. ஆயுதம் இருக்கும் காரணத்தினால் உலகத்தை மிரட்டுகிறாய் .. ஆனா அமெரிக்க அறிக்கை விடுத்தது ...எந்த அமெரிக்கர்களும் வெளிநாட்டிற்கு போக வேண்டாம் ... இந்த போராட்டத்தினால் பயந்து சொந்த நாட்டு மக்களை வெளிநாட்டுக்கு போகாதே என்று சொல்லும் ஏறி மிதித்து கொன்று விடும் கூட்டம் இது ... அது எங்களுக்கு எளிதான ஒன்று ... எனவே இந்த போராட்டம் எதற்கென்றால் இந்திய அரசாங்கத்திற்கு ஒரு கோரிக்கை ,உடனடியாக YOU TUBE இணையத்தை முடக்க வேண்டும் .. அதை பல பேர் DOWNLOAD செய்து பரப்பி வருகிறார்கள் .. அது இருக்கும் வரை சென்னை போல இந்தியாவின் ஒட்டு மொத்த கிராமமும் ,நகரமும் கொந்தளிக்கும் ... உங்க ராணுவம் போலிஸ் ஒன்றும் செய்ய முடியாது .. விபரித்ததை உணர்ந்து ஆப்கானிஸ்தான் ,லிபியா ,எகிபித் ,போன்ற நாடுகளில் YOUTUBE தடை செய்ததை போல இந்தியாவிலும் தடை செய்தால் நல்லது .... அமெரிக்காவிற்கு எதிரான இந்த கருத்துகளை இந்திய எடுத்து சொல்ல வேண்டும் ..உன் தூதரகத்தை எங்களால் பாதுகாக்க முடிய வில்லை .. மக்கள் கொந்தளித்து உள்ளனர் ,மன்னிப்பு கேக்க வேண்டும் .. நாயிகள் சொல்லுது ,,,இது கண்டிக்க தக்கது ,ஆனா கருத்து சுதந்திரம் ,ஒன்றும் செய்ய முடியாதாம் ... அப்போ அந்த கருத்து சுதந்திரத்தை நாங்களும் பயன்படுத்தலாமா ??? முள்ளை முள்ளால் எடுக்க தெரியும் கிருதுவர்களுடன் நடந்த விவாதத்திலே எந்த அசிங்கங்களையும் ஆபாசங்களையும் புட்டு புட்டு வைத்தோமோ அதை திரைப்படமாக குறும்படமாக வரும் ,,,பாதிரிகளின் லீலைகள் படமாக வரும் ...முக்காடு போடாமல் நீ வெளியே நடமாட முடியா நிலை வரும் .. பொதுமக்கள் கட்டுபாடுடன் களைந்து செல்லனும் ...முற்றுகை இடுவது பெரிய விஷயம் இல்லை தூதரகத்தை நம்ம அரசாங்கம் பாதுகாக்குது நமக்கும் அரசாங்கத்துக்கும் பஞ்சாயத்து இல்லை ... நம்ம அரசாங்கம் இதுபோல் ஒரு படத்தை வெளியிட்டால் நாம் கோரிக்கை வைப்போமா / உள்ளே புகுந்து சூறையாடி விடுவோம் நம்ம அரசாங்கம் கடமைக்கு பாதுகாப்பது போல அங்கெ போய் விசமத்தனம் செய்ய வேண்டியது இல்லை ... அமெரிக்க நாயே நீ வா ? உன் அலுவலகத்தை பாதுகாக்க நீ வா நம்ம கொந்தளிப்பு எல்லாம் LIVE ஆக TELECAST ஆகி கோடிகணக்கான மக்களுக்கும் முக்கிய மீடியாக்களுக்கும் சென்று இருக்கு ... இது பற்றி எரியும் .. இது ஓயாது ... இது ஆரம்பகட்டம் ... இன்ஷா அல்லாஹ்..... ஒட்டு மொத்த மக்களின் உணர்ச்சி கொந்தளிப்பின் வெளிப்பாடு ...

சனி, 15 செப்டம்பர், 2012

தவ்ஹீத் ஜமாஅத் போராட்டம்: ஸ்தம்பித்தது சென்னை... ஆடிப் போனது அமெரிக்க தூதரகம்!


சென்னை: நபிகள் நாயகத்தை கொச்சைபடுத்தி எடுக்கப்பட்ட அமெரிக்க திரைப்படத்தை கண்டித்து சென்னையில் இன்று அமெரிக்க தூதரக முற்றுகைப் போராட்டத்தை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்தியது.
ஆண்கள், பெண்கள், குழந்தைகள் உட்பட பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட இந்தப் போராட்டத்தில், அமெரிக்க அரசையும், திரைப்படத்தை தயாரித்தவர்களையும் அதை இன்னமும் நீக்காமல் வைத்துள்ள யூடியூபையும் கண்டித்து கொளுத்தும் வெயிலில் கோஷங்களை எழுப்பினர். அமெரிக்க அதிபர் ஒபாமா, வெளியுறவு அமைச்சர் ஹிலாரி ஆகியோரின் உருவப்படங்களை கிழித்து எரிந்தனர். கூட்டத்தில் மாநிலத் தலைவர் பி.ஜே கண்டன உரையாற்றினார்.

சென்னையில் திடீர் முற்றுகை, பரபரப்பு அமெரிக்க தூதரகம் மீது தாக்குதல்


சென்னை: சென்னையில் அமெரிக்க துணை தூதரகத்தின் மீது திடீர் தாக்குதல் நடத்தப்பட்டது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் எடுக்கப்பட்ட திரைப்படத்தில் நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தும் வகையில் சித்தரிக்கப்பட்டுள்ளதாக கூறி, அதை கண்டிக்கும் வகையில் சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்தை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் நேற்று முற்றுகையிட்டது.ஊர்வலமாக சென்று அண்ணா மேம்பாலம் அருகில் உள்ள அமெரிக்க துணை தூதரகத்தை முற்றுகையிட முயன்றனர். அங்கு துணை கமிஷனர் புகழேந்தி தலைமையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. கதீட்டரல் சாலையிலும் தடுப்பு அமைத்து போலீசார் நின்றிருந்தனர். ஏராளமான தொண்டர்கள் குவிந்திருந்த நிலையில் பாதுகாப்பு பணிக்கு குறைந்த அளவிலான போலீசாரே வந்திருந்தனர்.அவர்களை கட்டுப்படு த்த முடியாமல் திணறிக் கொண்டிருந்த நிலையில், யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் திடீரென அண்ணா மேம்பாலத்தில் 5 வாகனங்களில் வந்தவர்கள் அப்படியே வாகனத்தை நிறுத்தி விட்டு பாலத்தில் இருந்து குதித்து தூதரகம் முன்பு குவிந்தனர். தூதரகத்தின் வரவேற்பு பகுதியில் பாறாங்கற்களை தூக்கி வீசி தாக்கினர். கண்ணாடிகள் மீது சரமாரியாக கற்கள் வீசப்பட்டது.
கண்காணிப்பு கேமராக்களை அடி த்து நொறுக்கினர். செருப்பு, முட்டை போன்றவைகள் தூதரக கேட் மீது வீசப்பட்டன. தூதரகத்தைச் சுற்றி, ஓவியம் வரையப்பட்டுள்ளது. அதன் மீது கண்ணாடிகள் வைக்கப்பட்டிருந்தன. அதை உடைத்தனர். தூதரகத்துக்குள் சிலர் கற்களை வீசிக் கொண்டிருந்தனர். அந்த இடமே போர்களமானது. அசம்பாவிதங்கள் எதுவும் நடக்காத வகையில் கடைசி வரை சமாதான பேச்சுவார்த்தை நடத்தி தூதரகத்தில் இருந்து அவர்களை போலீசார் அப்புறப்படுத்தினர். 5க்கும் மேற்பட்ட அவரது உருவ பொம்மைகள் அண்ணா சாலையில் எரிக்கப்பட்டன. அமெரிக்க நாட்டின் கொடிகள் பல இடங்களில் எரிக்கப்பட்டது. அவர்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் சுமார் 2மணி நேரம் பரபரப்பு மிகுந்த அண்ணாசாலையில் மவுண்ட் ரோடு முதல் நந்தனம் வரை வாகனங்கள் ஸ்தம்பித்து நின்றன. அண்ணா மேம்பாலம் அருகே நின்றிருந்த வாகனங்களில் இருந்த பெண்கள் சம்பவத்தை பார்த்து அலறி அடித்து ஓடினர்.பின்னர் தமுமுக மூத்த தலைவர் ஹைதர் அலி, தமுமுக தலைவர் குனங்குடி அனிபா மற்றும் மமக பொது செயலாளர் தமிமுன் அன்சாரி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் தொண்டர்களை சமாதானப்படுத்தினர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட 600க்கும் மேற்பட்டோரை கைது செய்து அருகில் உள்ள திருமண மண்டபங்கள் மற்றும் நியூ கல்லூரியில் தங்க வைக்கப்பட்டனர். தூதரகத்தின் செக்யூரிட்டி அதிகாரி விசாரணை செய்து தூதரகத்துக்கு அறிக் கை கொடுத்துள்ளார். இது குறித்து அமெரிக்க அரசுக்கும் தகவல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

நாட்டை துண்டாடியவர்கள் யார் ? : Part 9


ஜின்னா அரசியலில் நுழையும் போது ஒரு முஸ்லிமாக நுழைந்தார் என்பதை விட ஒரு நாட்டு பற்றுள்ளவராக தான் நுழைந்தார் என்று சொல்லவேண்டும். இதனை வரலாற்று ஆசிரியர் சேர்வாய் இப்படி குறிப்பிடுகிறார் " ஜின்னா 1906 ஆம் ஆண்டு காங்கிரசில் இணையும் போது ஒரு தேசியவாத முஸ்லிமாக தான் இருந்தார் ". அதனால் தான் இந்து முஸ்லிம் பிரச்சினை ஏற்படும் போதெல்லாம் அதை தீர்ப்பதற்கு முன் நின்றார். இதன் மூலம் காங்கிரசில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். அந்த நேரத்தில் ஜின்னா காங்கிரசிலும், முஸ்லிம் லீகிலும் குறிப்பிட்டு சொல்லும்படியான ஆதிக்கம் செலுத்தினார். இந்தியாவுக்கு ஒரு அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கி தருவதிலும் , அதனை காங்கிரஸ் , முஸ்லிம் லீக் மாநாடுகளில் ஒப்புதல் வாங்கி தருவதிலும் ஜின்னா முக்கிய பங்கு வகித்தார்." என்று விடுதலை போராட்ட வீரரும், வரலாற்றாசிரியருமான கே.எம்.முன்ஷி குறிப்பிடுகிறார். அந்த அளவுக்கு ஜின்னா பிரிவினைவாதியாக இல்லாமல் தேசியவாதியாகத்தான் இருந்தார். ஆனால் காங்கிரஸ் கட்சித் தலைவர்களின் ஒருதலை பட்சமான நடவடிக்கைகளும், கருத்துகளும் முஸ்லிம்கள் மனதில் சந்தேகறேகையை உண்டாக்கியது. அதற்கேற்றார் போல் 1937 ல் நடைபெற்ற தேர்தல் முஸ்லிம் லீக்கிற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. இதனால் ஜவஹர்லால் நேரு கூட முஸ்லிம் லீக்கை புறக்கணித்தார். இந்தியாவில் முஸ்லிம் லீக் என்ற கட்சியே இல்லை , காங்கிரஸ் கட்சி மட்டும் தான் இருப்பது போல் பேசினார். இது முஸ்லிம்கள் மனதில் ஒருவித அச்சத்தை உண்டாக்கி பிரிவினைக்கான விதையை தூவியது. ஒரு பக்கம் இந்துத்துவம் பேசக்கூடியவர்கள் நாட்டை தூய்மையாக்க வேண்டும் என்று முஸ்லிம்களை பிரித்து பிரிவினைவாதம் பேசினார்கள், மறுபக்கம் காங்கிரசும் அதன் செயல்பாடுகளை ஒரு சார்பாக அமைத்தது முஸ்லிம்களின் அச்சத்தை அதிகமாகியது. இந்த அச்சம் நியாம் தான் என்பதை பிரிட்டிஸ் பிரதமர் கிளமன்ட் அட்லி ஒத்துகொண்டார். அதே போல் இந்தியா சுதந்திரம் பெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்த வைஸ்ராய் வேவல் அவர்களும் இதனை சரிதான் என நினைத்தார். இங்குள்ள காங்கிரசாரும் தனி நாடு உருவானால் இந்தியாவின் ஏகபோக ஆட்சியை அனுபவிக்கலாம் , ஆட்சியில் சம பங்கு என்ற நிலை இனி இல்லை என்று நினைத்து பிரிவினையை ஆதரித்தார்கள். பாகிஸ்தான் என்ற தனிராஜியம் உதயமாகும் நிலை உருவானது. கட்டுரையின் இறுதிப் பகுதிக்கு வந்துவிட்டோம். அடுத்த தொடருடன் முடிவடையும். ஆக்கம் : அபுல் ஹசன் - தக்கலை.

வெள்ளி, 14 செப்டம்பர், 2012

நாட்டை துண்டாடியவர்கள் யார் ? : Part 8


ஒன்றுபட்ட இந்திய சுதந்திரம் ஒரு மீள்பார்வை : இந்தியா என்ற அகண்ட நிலபரப்பை 800 ஆண்டுகளாக ஆட்சி செய்தவர்கள் முஸ்லிம்கள். அவர்களிடையே ஏற்பட்ட ஒற்றுமையின்மையை பயன்படுத்தி வணிகம் செய்வதற்காக வந்து பின்னர் நாட்டையே தங்கள் கைவசம் கொண்டு வந்தவர்கள் ஆங்கிலேயர்கள். அதனால் தான் ஆண்ட பரம்பரை அடிமையாய் வாழ விரும்பாமல் சுதந்திரத்திற்காக தங்கள் இன்னுயிரையும் தியாகம் செய்து போராடினார்கள். இந்தியாவின் முதல் சுதந்திரப் போர் என வர்ணிக்கப் படும் சிப்பாய் கலகம் முஸ்லிம் சிப்பாய்களால் தான் துவக்கப் பட்டது. அது மட்டுமல்லாமல் திப்புசுல்தான் போன்ற முஸ்லிம் அரசர்களும் தங்கள் தன்மானத்தை விட்டு கொடுக்காமல் அடங்கி பிழைத்து கொள்ளலாம் என்ற ஆசை வார்த்தைகளுக்கு அடிபணியாமல் போராடி தங்கள் உயிரை தியாகம் செய்தார்கள். கேரளாவில் மாப்பிள்ளைமார் என்று அழைக்கப்படும் முஸ்லிம்களின் ஒரு பிரிவினர் சுதந்திரத்திற்காக கடுமையான முறையில் போராடினார்கள். ஆனால் வரலாற்றின் பக்கங்களில் அவர்களுக்கான இடம் மதத்திற்காக போராடினார்கள் என்று சொற்பமாகவே இருந்தது. ஆனால் ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடுவது தங்கள் மார்க்க கடமை போல் முஸ்லிம்கள் நினைத்தார்கள்.
முஸ்லிம்களின் போராட்டம் தான் மற்ற சமுதாய மக்களை சுதந்திர போராட்டத்தின் பால் தள்ளியது. இந்த போராட்டம் அங்கொன்றும், இங்கொன்றுமாக துவங்கியது நாளடைவில் நாடு முழுவதும் பற்றி எரியும் தேசிய போராட்டமாக மாறியது. இந்த தேசிய போராட்டத்தை தலைமை ஏற்று நடத்தும் முகமாகத் தான் 1885 ல் ஆலன் ஆக்டோவியன் ஹயும் என்ற வெள்ளையரால் காங்கிரஸ் கட்சி துவங்கப்பட்டது. பின்னர் அதை காந்தியடிகளும், அதன் பின்னர் ஜவஹர் லால் நேருவும் தலைமை தாங்கி நடத்தினார்கள். காங்கிரஸ் கட்சியின் ஆரம்ப காலத்தில் முஸ்லிம்கள் அதிகமாக இணைந்து அதில் அங்கம் வகித்தார்கள். அதனால் தான் ஜின்னாவும் காங்கிரசில் இணைந்து விடுதலைப் போராட்டத்தில் உத்வேகமாக அர்பணிப்பு உணர்வுடன் செயல்பட்டார். ஆனால் ஆங்கிலேயர்கள் இந்துக்களுக்கும் , முஸ்லிம்களுக்கும் உள்ள மத வேறுபாடுகளை, கலாசார வேறுபாடுகளை நன்கு கணித்து சுதந்திரப் போராட்டத்தின் வீரியத்தை குறைக்க திட்டம் தீட்டினார்கள். அவர்களுடைய மூளையில் உதயமானது தான் பிரித்தாளும் சூழ்ச்சி. முஸ்லிம்களுக்கும் , இந்துக்களுக்கும் இடையே உள்ள மத வேறுபாடுகளை பயன்படுத்தி மத உணர்வுகளை தூண்டி விட்டார்கள். அதற்கு இங்குள்ள சங் பரிவார சிந்தனை கொண்டவர்களும், முஸ்லிம்களில் சிலர்களும் பலியாயினர். விளைவு முஸ்லிம்கள், இந்துக்களிடையே ஆங்காங்கே கலவரம் ஏற்பட்டது. காங்கிரஸ் கட்சிக்குள்ளே கருத்து வேறுபாடுகளும் ஏற்பட்டது. முஸ்லிம்கள் தங்களுக்கு காங்கிரசில் உரிய இடம் இல்லை என்று நினைக்க ஆரம்பித்தார்கள். இந்த பிரிவினை கருத்துகள் பரப்பப் படும் போதெல்லாம் ஜின்னா இந்து, முஸ்லிம் ஒற்றுமைக்கு பாலமாக விளங்கினார். இதனாலேயே அவரை ஒற்றுமையின் தூதுவன் என்று சரோஜினி நாய்டு குறிப்பிட்டார்கள். அப்படி பட்ட ஜின்னாவே இறுதியில் பிரிவினை மாயவலையில் வீழ்ந்தார்கள். காங்கிரஸ் தங்களை புறக்கணிப்பதாக எண்ணி பெரும்பாலான முஸ்லிம்கள் அதிலிருந்து விலகி புதிதாக முஸ்லிம் லீக் என்ற புதிய அமைப்பு உருவானது. தேசப்பிரிவினை பற்றிய மேலும் பல தகவல்களை அடுத்த தொடரில் காண்போம். ஆக்கம் : அபுல் ஹசன் - தக்கலை.

வியாழன், 13 செப்டம்பர், 2012

நபிகள் நாயகத்தை கொச்சைபடுத்தும் அமெரிக்க திரைப்படம்: அமெரிக்க தூதரகம் முற்றுகை! TNTJ அறிவிப்பு!


நபிகள் நாயகத்தைக் காமூகராகச் சித்தரித்து சினிமா எடுத்துள்ள அமெரிக்க கிறித்தவப் பாதிரியாரையும் அவனுக்கு துணை நிற்கும் அமெரிக்க அரசையும் கண்டித்து அமெரிக்கத் தூதரகம் முற்றுகை! என்றும் தமிழகம் எங்கும் பரவலாக கண்டன ஆர்ப்பாட்டம நடத்த வேண்டும் என தமிழ்நாடு தவ்ஹீத் அறிவிக்கின்றது. பொது செயலார் தனது அறிக்கையில் குறிப்பிடும் போது சென்னையில் 15-9-2012 சனிக்கிழமை காலை 11 மணிக்கு அமெரிக்க தூரகம் முற்றுகையாகவும் சென்னை அல்லாத மற்ற பகுதிகளில் மாவட்ட தலைநகரங்களிலும் முக்கிய நகரங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

நபிகள் நாயகத்தை கொச்சைபடுத்தும் அமெரிக்க திரைப்படம்: அமெரிக்க தூதரகம் முற்றுகை! TNTJ அறிவிப்பு!


நபிகள் நாயகத்தைக் காமூகராகச் சித்தரித்து சினிமா எடுத்துள்ள அமெரிக்க கிறித்தவப் பாதிரியாரையும் அவனுக்கு துணை நிற்கும் அமெரிக்க அரசையும் கண்டித்து அமெரிக்கத் தூதரகம் முற்றுகை! என்றும் தமிழகம் எங்கும் பரவலாக கண்டன ஆர்ப்பாட்டம நடத்த வேண்டும் என தமிழ்நாடு தவ்ஹீத் அறிவிக்கின்றது. பொது செயலார் தனது அறிக்கையில் குறிப்பிடும் போது சென்னையில் 15-9-2012 சனிக்கிழமை காலை 11 மணிக்கு அமெரிக்க தூரகம் முற்றுகையாகவும் சென்னை அல்லாத மற்ற பகுதிகளில் மாவட்ட தலைநகரங்களிலும் முக்கிய நகரங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் தொழிற்சாலைகளில் தீ: பலி எண்ணிக்கை 300ஐ தாண்டியது!


லாகூர்:பாகிஸ்தானின் லாகூரிலும், கராச்சியிலும் தொழிற்சாலைகளில்ஏற்பட்ட தீ விபத்துகளில் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 300 ஐ தாண்டியுள்ளது. ஏராளமானோர் காயமடைந்துள்ளனர். லாகூர் நகரில் ஷூ தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 25 பேர் தீயில் கருகி பலியானார்கள். தொழிற்சாலையின் உரிமையாளர் ரஜப் அலியும் அவரது 10 வயது மகனும் பலியானவர்களில் அடங்குவர். 40க்கும் மேற்பட்டவர்கள் தொழிற்சாலையில் இருந்தனர். 15 பேர் தீக் காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஜெனரேட்டர் வெடித்ததே தீ விபத்துக்கு காரணம் என கூறப்படுகிறது. கராச்சியில் ஆடை தயாரிப்பு தொழிற்சாலையிலும் தீ விபத்து ஏற்பட்டது. பல உடல்களும் அடையாளம் காணமுடியாத அளவுக்கு கருகிய நிலையில் உள்ளதாக மருத்துவமனை அதிகாரிகள் கூறுகின்றனர். காயமடைந்த பலரும் கராச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீயணைப்பு படையினரும், உள்ளூர் மக்களும் இணைந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். பல மணிநேர போராட்டத்திற்கு பிறகு தீ அணைக்கப்பட்டது. இதில் அங்கு வேலைப்பார்த்த 270 மேற்பட்டோர் மரணமடைந்தனர்.

இறைத்தூதரை அவமதித்தவர்கள் மீதும் கடும் நடவடிக்கை – எகிப்து அதிபர்


கெய்ரோ:இறைவனின் இறுதித் தூதரான முஹம்மது நபி(ஸல்)அவர்களையும், இஸ்லாத்தையும் அவமதிக்கும் திரைப்பட டிரைலரை வெளியிட்ட நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எகிப்து அதிபர் முஹம்மது முர்ஸி கூறியுள்ளார். இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது: “முற்றிலும் வகுப்புவாதத்தின் அடிப்படையிலான விருப்பங்களே இதன் பின்னணியில் அமைந்துள்ளன. புனித சின்னங்கள் மீதான தாக்குதலை அனைத்து சமூகங்களும் எதிர்க்கின்றன. அத்துடன் நாட்டில் உள்ள பல்வேறு தூதரகங்கள் மற்றும் நிறுவனங்களை பாதுகாக்கும் பொறுப்பும் அரசுக்கு உள்ளது. சட்டத்தை கையில் எடுக்கும் அதிகாரத்தை மக்களுக்கு வழங்கவில்லை. மக்கள் சட்டத்தை மதிக்கவேண்டும்.” இவ்வாறு முர்ஸி கூறியுள்ளார்.

அஸ்ஸாம் முதல்வரை கண்டித்து சென்னையில் நடைபெற்ற மாபெரும் முற்றுகைப் போராட்டம்: கைது செய்ய வசதி இல்லாமல் கலைந்து செல்லுங்கள் எனக் கூறிய காவல்துறை! அல்ஹம்துலில்லாஹ்!!


கலவரத்தைக் கட்டுப்படுத்தத் தவறி, அகதி முகாம்களில் நிவாரணப் பணிகளில் மெத்தனம் காட்டி, முஸ்லிம்களின் மக்கட்தொகைப் பெருக்கமே கலவரத்திற்குக் காரணம் என்று கூறிய அஸ்ஸாம் முதல்வர் தருண் கோகையைக் கண்டித்து சென்னை சத்தியமூர்த்திபவன் அருகில் இன்று மாலை 4 மணி அளவில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் மாபெரும் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. மாநிலத் தலைவர் பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் கண்டன உரையாற்றினார்கள். ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு தருண் கோகையை முதல்வர் பதவியில் இருந்து நீக்குமாறு கோரி தங்களது கண்டன கோஷங்களை எழுப்பினர். இது முற்றுகைப் போராட்டம் என்பதால் காவல்துறையினர் போராட்டத்தில் கலந்து கொண்டவர்களை கைது செய்ய வேண்டும் ஆனால் மாறாக காவல்துறையே கூட்டம் ”அதிகமாக உள்ளது இவர்களை கைது செய்யும் அளவிற்கு எங்களிடம் வசதி இல்லை எனவே அனைவரும் போராட்டம் முடிந்ததும் கலைந்து செல்லுங்கள்” எனக் கூறினர். அல்ஹம்துலில்லாஹ்! காரணம், ஓரிரு நாட்களில் ஏற்பாடு செய்யப்பட்ட போராட்டம் என கூட்டத்தை பார்த்த யாரும் நம்ப முடியாத அளவிற்கு ஏராளமானோர் இப்போராட்டத்தில் கலந்து கொண்டனர். அல்ஹம்து லில்லாஹ்.

புதன், 12 செப்டம்பர், 2012

நாட்டை துண்டாடியவர்கள் யார் ? : Part 7


இந்துத்துவ அறிஞர்கள் பலர் முஸ்லிம்கள் இணைந்த இந்திய தேசத்தை விரும்பவில்லை என்பதை அவர்களின் வார்த்தைகளை வைத்தே நாம் அறியலாம். ஹர்த்தால் என்ற இந்து அறிஞர் இப்படி குறிப்பிடுகிறார் " இந்துக்களும், முஸ்லிம்களும் சேர்ந்து வாழக்கூடிய இந்தியா வேண்டும் என்பது முட்டாள்தனமானது . அது ஒரு போதும் நிலையாக இருக்க முடியாது. " அதாவது முஸ்லிம்களை இந்தியாவில் வைக்க வேண்டும் என்ற எண்ணமே தவறு என்று இவர் வாதிடுகிறார். அதே போல் மெயரே விசர் என்பவர் இந்து ராஜ்யம்தான் தங்கள் கனவு என்று கூறுமளவுக்கு முழங்குகின்ற வார்த்தைகளை பாருங்கள் " இந்து இனத்தின் இந்தியா மற்றும் பஞ்சாப்பின் எதிர்காலம் நான்கு தூண்களில் தான் நிறுவ முடியும். 1 . இந்து சங்காதனம். 2 . இந்து ராஜ்ஜியம் , 3 . முஸ்லிம்களை தூய்மைப் படுத்துவது ( கிளீன் பண்ணுவது ) 4 . ஆப்கனிஸ்தானை கைப்பற்றி தூய்மைப்படுத்துவது. மேலும் வி.டி.சாவர்கரின் இந்தியப் பிரிவினை கருத்துகளை ஆர்.ஏன். அகர்வால் அவர்களின் தேசிய இயக்கம் நூலில் உள்ள வார்த்தைகளின் அடிப்படையில் பார்த்தால் முஸ்லிம்களுக்கு இந்தியாவில் இடமில்லை என்றே தோன்றுமளவுக்கு சாவர்கரின் பிரகடனம் அமைந்துள்ளதை நாம் அறியலாம். " இந்தியா என்பது ஒற்றை தேசம் அல்ல. அது இந்து நாடு, முஸ்லிம் நாடு என இரண்டாக உள்ளது. முஸ்லிம்களுக்கு இந்தியாவில் சிறுபான்மையர் என்று இல்லாமல் எந்த ஒரு எதிர்காலமும் இல்லை " என்று சாவர்கர் குறிப்பிடுகிறார். மேலும் கே.எல். கௌபா என்ற பிரபலமான சட்ட வல்லுநர் 1973 ம் ஆண்டு வெளிவந்த தன்னுடைய மறைமுக வார்த்தை என்ற நூலில் சாவர்கர் மட்டும் இந்த கருத்தில் இருக்கவில்லை. அதற்கு முன்பே பல இந்து தலைவர்கள் பிரிவினை கருத்தில் இருந்தார்கள் என்று குறிப்பிடுகிறார். இந்துமாக சபை தலைவரான சங்கராசார் குர்தொகி வெளியிட்ட அறிக்கையில் " இந்தியா இந்துக்களுக்கே சொந்தம். முஸ்லிம்கள் இங்கு விருந்தினர் தான், விருந்தினர் போல் நடக்க அவர்கள் கற்று கொள்ள வேண்டும். " என்று காட்டமாகவே குறிப்பிடுகிறார். இன்னும் எத்தனை சான்றுகளை வேண்டுமானாலும் வைக்க முடியும். முஸ்லிம்கள் பிரிவினையை தூண்டுவதற்கு காரணமும் இல்லை, நாட்டை துண்டாடவும் இல்லை. நயவஞ்சகர்கள் விரித்த வலையில் ஜின்னா என்ற தனி மனிதன் விழுந்து அந்த பழியை கோடிக்கணக்கான முஸ்லிம்களை சுமக்க வைத்து விட்டார் என்று தான் சொல்ல தோன்றுகிறது . தேசப்பிரிவினை பற்றிய மேலும் பல தகவல்களை அடுத்த தொடரில் காண்போம். ஆக்கம் : அபுல் ஹசன் - தக்கலை.

கூடங்குளம் பிரச்சினை அயல்நாட்டு சதியா ?


கூடங்குளம் பிரச்சினை அயல்நாட்டு சதியா ? கூடங்குளம் போராட்டங்களை நாம் அயல் நாட்டு சதி என்று சொல்வதற்கு பல நியாயமான காரணங்கள் உள்ளன. ஏனென்றால் தூத்துக்குடி, திருநெல்வேலி பகுதிகளில் செயல்படுகின்ற பல கிறிஸ்தவ அமைப்புகள் வெளிநாடுகளில் இருந்து சமூக சேவைக்காக என்று சொல்லி அதிகமான அளவில் நிதி பெற்று வருகின்றன. அதிலும் குறிப்பாக அமெரிக்கா , பிரான்ஸ் , ஜெர்மனி போன்ற நாடுகளில் இருந்து கணிசமாக பணத்தை பெற்று உள்ளன. உதாரணமாக, தூத்துக்குடி டயசிஸ் அசோசிசன் (TDA) என்ற அமைப்பு 2010 -2011 ம் ஆண்டில் பிரான்சில் இருந்து ஒரு கோடியே 43 லட்சம் 23 ஆயிரம் 406 ரூபாய், ஜெர்மனியில் இருந்து 84 ,13 ,619 ரூபாய், இத்தாலியில் இருந்து 61 ,55 ,843 ரூபாய், நெதர்லாந்தில் 45 ,54 ,572 ரூபாய் ஆக மொத்தம் ஏறக்குறைய 4 கோடி ரூபாய்க்கு மேல் நன்கொடை ஒரு ஆண்டில் பெற்றுள்ளது. இது போல் பல அமைப்புகள் பெற்றுள்ளன . இவை அனைத்து பணமும் மத விவகாரங்கள், மக்கள் சேவைக்கு மட்டும்தான் பயன் படுத்தப் படுகிறதா ? இல்லை கூடங்குளத்திற்கும் பயன் படுத்தப் படுகிறதா ? என்ற சந்தேகம் பெரும்பாலோருக்கு எழத்தான் செய்கிறது. இந்த சந்தேகம் பிரதமருக்கும் எழுந்ததால் தான் கடந்த வருடம் பத்திரிக்கை ஒன்றுக்கு அளித்த பெட்டியில் இந்த கருத்தை தெரிவித்தார். மேற்குறிப்பிட்ட தகவல் அனைத்தும் இந்த வருடம் ஜனவரி மாதம் இந்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவல்கள். பல பத்திரிகைகளிலும் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க , பிரான்ஸ் ,ஜெர்மனிக்கு இந்தியாவில் உருவாகும் அணுஉலை திட்டத்தை எதிப்பதற்கான காரணம் என்ன ? ஏன் தேவை இல்லாமல் எதிர்க்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா ? அதற்கு காரணம் உண்டு. அமெரிக்க, ஜெர்மனி, பிரான்ஸ் நாடுகளை சேர்ந்த நிறுவனங்கள் அணு உலைகளையும் , அதன் தொழில் நுட்பத்தையும் இந்தியாவிடம் விற்க முயற்சி செய்து முடியாமல் போய் விட்டது. ஏனென்றால் இந்தியாவின் சட்ட திட்டங்களுக்கு அவை ஒத்துவரவில்லை. உதாரணமாக ஏ,பி, 1000 (A.P.1000) அணு உலையை தயாரிக்கும் வெஸ்டிங் ஹாவுஸ் - டோசிபா என்கிற அமெரிக்க நிறுவனம் இந்திய சட்டங்களில் இருந்து தங்களுக்கு விதிவிலக்கு அளிக்கும்படி கேட்டன இந்தியா அதற்க்கு மறுத்து விட்டது. இது போல் தான் மற்ற நாடுகளும். தங்கள் அணு உலைகளின் விற்பனை வாய்ப்பு பறிபோய் விட்டதே என்ற காழ்புணர்ச்சியில் இந்த நாடுகளின் நிறுவனங்கள் சதி வேலைகளில் ஈடு பட்டிருக்கவும் வாய்ப்பு உண்டு. மேலும் தமிழ் நாட்டில் உள்ள தொண்டு நிறுவனங்களுக்கு ( பெரும்பாலானவை கிறிஸ்தவ அமைப்புகள் ) 2009 - 2010 ம் ஆண்டுகளில் மட்டும் வெளிநாடுகளில் இருந்து வந்த நிதி தொகை 1663 .31 கோடி ரூபாய்கள் என்பது நம்மை எல்லாம் மலைக்க வைக்கிறது. இதில் கூடங்குளம் போராட்டகுழு ஒருங்கிணைப்பாளர் உதய குமாருக்கும் சாக்செர் (SOCCER) South Asian community center for Education and Research என்ற பெயரில் தன்னார்வ அமைப்பு உள்ளது என்பதை நாம் கவனிக்க வேண்டும். பல நிறுவனங்களை சி.பி.ஐ. விசாரித்து நடவடிக்கை எடுத்து வருகிறது. ஒட்டு மொத்தமாக கண்ணைமூடி கொண்டு நாம் குற்றம் சுமத்தவில்லை . சந்தர்ப்ப சூழ்நிலைகள் கூடங்குளம் போராட்டத்திற்கு அயல் நாட்டு சதிதான் காரணமாக இருக்கும் என்று நம்பத்தான் வைக்கிறது. பொதுவாகவே ஊடகங்கள் பொறுப்புணர்வில்லாமல் நடப்பது தான் இந்த மாதியான அறிவியல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் உணர்ச்சிபூர்வமாக மாறுவதற்கு காரணம். பிரச்சினையை ஊதி பெரிதாக்காமல் இருப்பது பத்திரிகைகளின் கடமை. கேட்டதை விசாரிக்காமல் இணையதளம் மூலமாக பரப்பாமல் இருப்பது பொது மக்களின் கடமை. மக்களின் அச்ச உணர்வை நீக்கி ஆபத்து இல்லை என்று புரிய வைப்பது நல்ல அரசின் கடமை. அவரவர் கடமையை சரி வர செய்தாலே பிரச்சினை தீர்ந்து விடும் . மக்களின் வாழ்விலும் வீடுகளிலும் ( மின்சார பிரச்சினை தீர்ந்து ) ஒளி பிறக்கும். எல்லாம் வல்ல இறைவன் அதற்கு அருள் புரியட்டும். அபுல் ஹசன் - தக்கலை